இலங்கை அரசுக்கு எதிரான வெற்றியை தமிழ் மக்களும் கொண்டாட வேண்டும்.

 

இலங்கை அரசுக்கு எதிரான வெற்றியை தமிழ் மக்களும் கொண்டாட வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 1977 ல் தமிழ் மக்கள் கொடுத்த பெரு வெற்றியை போன்று 2013 ல் நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலம் அரசியல் நிலைப்பாட்டினை திட்டவட்டதாக சர்வதேசத்திற்க்கும் இலங்கை அரசுக்கும் தெரிவித்துள்ளனர்.

1977 க்கு பின்னர் தமிழ் மக்கள் மீது போர்தொடுத்து தமிழ் மக்களை இனப்படகொலை செய்து தனது போர் வெற்றியினை தனது நாட்டு சொந்த மக்கள் மீதான போர்வெற்றியினை கொண்டாடியது.
தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாக தமிழ் மக்கள் தமத சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை தொடர்வார்கள் இலங்கை அரசு இந்திய - சரவதேசம் மக்களின் கருத்து பகிர்வை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் இனவாத கட்சிகளும் இஸ்லாமிய கட்சிகளும் இங்கிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

தமிழ் மக்களின் இந்த வெற்றி மிகவும் அவசியமானதும் இலங்கை அரசுக்கு எதிரான வெற்றியை தமிழ் மக்களும் கொண்டாட வேண்டும்.
Post a Comment (0)
Previous Post Next Post