Search This Blog

Saturday, 19 January 2019

கடிதம் 21, தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

கடிதம் 21, தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே !!!--------தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 24/01/2019, (கடிதம் 22, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
===========
ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே !!!
===============
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஒரேஒரு தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே, இவர் முதலிசமூகத்தை சேர்ந்த உயர்சாதியினன் என்ற காரணமே கொல்லப்படக் காரணமாகியது, ரெலோ உள்ளேயும், புலிகளின் அனுசரணையுடன் வடமராட்சியை சேர்ந்த சிலரின் தூண்டுதலினாலும் இக் கொலை நடந்தேறியது.
1984 ம் ஆண்டு சுதன் -ரமேசு தலைமையில் ஒரு கொலைமுயற்சி முறியடிக்கப்பட்ட போதும் 1986 ம் ஆண்டு இவர்கள் எல்லோரும் சேர்ந்து புலிகளை பாவித்து கொலையை ஒப்பேற்றினார்கள்.

இதுவே தமிழர்களின் இன்றய இழிநிலைக்கு வழிவகுத்தது.
1982ம்ஆண்டுக்pகு பின்னர் ரெலோ இயக்கத்தை 1986 வரையில் அன்றய காலத்துடன் இணைத்து வளர்த்தெடுத்த பெருமை சிறீ சபாரதத்தினத்தின் தலைமையே இதனi ஏற்றக்க மறுத்தவர்கள் ரெலோவின்உள்ளேயும் வெளியேயும் இயங்கியரெலோ தலைவரை கொலை செய்தாவது ரெலோவிள் வளர்சியை தடுத்தனர்.
தமிழர்களின் உரிமைகள் இந்தியாவின் ்அனுசரணையின்றி பெயமுடியாது என்ற யதாரத்தத்தை முன்னெடுத்தவர் சிறீசபாரத்தினம் அவர்களாகும்.
இந்தியாவின் உதவியின்றி தமிழர் அரசியல் உரிமைகளை பெறமுடியாது என்பது தமிழ் தலைமைகளின் நீண்டகால பொது முடிவின் பின்னர் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டது, இந்தியாவின் தென்பகுதி பாதுகாப்பு நலனுக்குட்பட்டு தமிழரின் அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பது என்ற தமிழர்களின் எதிர்பார்ப்பை இந்திய இராணுவத்தின் வருகையுடன் ஒப்பேற்றியிருப்பதே !!!

சிறீசபா இல்லாத போதும் eprlf அதை முன்னெடுத்திருந்தது.
மீண்டும் இந்தியாவின் அனுசரணையின்றி இலங்கையில் தமிழர் அரசியல் உரிமைகளை பெறமுடியாது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதே தேவை, சிறீசபாரத்தினத்துக்கு முன்பும் பின்னரும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு தலைமைத்துவம் இருக்கவில்லை.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
21/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 20, நமக்காக நாம்-தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

கடிதம் 20, நமக்காக நாம்-தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 21/01/2019, (கடிதம் 21, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
====================
நமக்காக நாம்
===================
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மக்களுக்காக இயங்கும் தோழர்களில் யார் என்ற தேடலில் சுவிசில் சேகர் தலைமையில் இயங்கும் நமக்காக நாம் என்ற அமைப்பை இங்கு குறிப்பிட்டு குறிப்பிட்டு இக் கடிதத்ததை எழுதலாம் என்நினைக்கின்றேன்.
தலைவர் சிறீசபாரத்தினத்தை முன்னிறுத்தாத தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் மக்கள் ஒரு போராடட இயக்கமாக பார்க்கமாட்டார்கள் என்பதை கவனம் கொள்ள வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் பல ரெலோவின் கிளைகள் - பிரித்தானியா> சுவிஸ் பிரான்ஸ்> கனடா ஜேர்மன் ஆகியநாடுகளில் ரெலோ இயங்கின்றது என்பதை ஊடகங்களிலும் ரெலோவின் வைபர் குறூப்புக்களிலும் உல்லாச கதையளப்பில் பார்க்கின்றேன்.
ஒவ் நாடுகளிலும் அநேகமாக இரு அல்லது அதற்க்கும் மேற்ப்பட்ட பிரிவுகள் இயங்குகின்றன அவர்களுக்கிடையே சர்சரவுகளும் குழப்பங்களும் ஒருவரை யொருவர் கேலி பண்ணுவதும் குறைகூறுவதுமாக இவர்களது கதையளப்பு இருக்கின்றது இந்த கதையளப்பை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக காண்கின்றபோதிலும் இவர்களில் தமிழீழ விடுதலை இயக்கமாக இயங்கியவர்கள் ஒரு சிலரே ஏனையோருக்கு இயக்கம் அரசியல் மக்களுக்கான தொடர்புகளில் உள்ள குழப்பம் அறிவின்மை இவர்களை மிகவும் முரண்பட்டவர்களாக வைத்திருக்கின்றது, அல்லது பொருட்படுத்தாத இயக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒருசிலராவது மிகவும் தெளிவு கொண்டோராக இருப்பதும் உண்மையே> மேலும் சிலர் தமது அன்றயபுழுகு மூட்டைக்காகவே கூட்டங்கள் ஒன்று கூடல்களுக்கு வருகின்றார்கள் என அந்த கூட்டங்களில் இருக்கும் உறுப்பினர்களில் சிலரது கருத்தாகவும் இருக்கின்றது.
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் சுவிஸ்சில் இயங்கும் நமக்காக நாம் அமைப்பு இலங்கையில் பலவேறு உதவிகளை மக்களுக்கு நேரடியாக செய்து கொண்டிருக்கின்றது.
அது மட்டுமல்ல நமக்காக நாம் அமைப்பு முன்னாள் ரெலோவினர் மட்டுமல்ல இதர இயக்கங்களில் இருந்தவர்களையும் இணைத்து இலங்கையில் ரெலோவின் முன்னாள் உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்பட்ட ரெலோ தோழர்களின் பிள்ளைகள் என பல்வேறு வகையினரையும் இணைத்து இயங்குகின்றது.
இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் நமக்காக நாம் போராட்டத்தில் தொலைத்த சிறீசபாராத்தினத்தின் அடையாளத்தை தொடர்ந்து இலங்கையில் நிலை நிறுத்தும் அமைப்பாக இயங்குகின்றது, பலவேறு கிராமங்களில் சிறீசபாவை எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த பல வருடங்களாக நமக்காக நாம் அமைப்பினரது நடவடிக்கைகளை ரெலோ சர்வதேசம் அமைப்பு எனும் சமூக வலையில் வெளியிட்டிருந்தது,
அவர்களது ஒவ்வொரு மக்கள் தொடர்பிலும் தலைவர் சிறீசபாரத்தினம் அடையளத்துடன் தமது சேவைகளை செய்து வருக்கின்றார்கள் இந்த அமைப்புடன் கடந்த காலங்களில் புலிகளினால் கொல்லப்பட்ட தலைவர் சிறீசபாரத்தினம் ஒரு வரலாற்று தவறு என உணர்ந்த அல்லது நாம் தமிழர்கள் எம்மிடையே மோதி அழிந்து கொண்டோமே என உணர்ந்த இருதரப்பினரும் இணைந்து இந்த இயக்கத்தை நடாத்துவது நல்ல முன் உதாரணமாகும்.
அது போன்ற பல்வேறு தரப்பினரை இணைத்து அரசியலிலும் மக்கள் உதவித் திட்டங்களிலும் இயங்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் ஆனால் இலங்கையில் ரெலோ அல்லது இதர நாடுகளில் ரெலோ இது போன்ற முயற்ச்சிகளை முன்னெடுக் தெரியாது இருக்கின்றார்கள்.
புலம் பெயர்நாடுகளில் குறிப்பாக லண்டனில் வெறுமனே ரி-வடை கூட்டங்களை நடாத்தி விட்டு காலத்ததை வெற்றாக ஓட்டுகிறார்கள். புலம் பெயர்நாடுகளில் குறிப்பாக லண்டனில் ரெலோ இயங்கு முறையும் விசேடமாக லண்டன் ரெலோ இயங்கு முறையும் இவர்களது மனநோய்கள் பற்றியும்.தனித் தனி கடிதமாக வெளிவரும்.
ரெலோ சுவிஸ் கிளை அமைப்பின் நமக்காக நாம் அமைப்பினர் க டந்த காலங்களிலும் இனிவரும் காலங்களிலும் திட்டமிடப்பட்டுள்ள உதவி வழங்கல்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு சாவகச்சேரி .கல்லூரிகள் மன்னார் யாழ்ப்பாணம் பூநகரி கொக்குத் தொடுவாய் என பல இடங்களில் முன்னாள் ரெலோ போரிகளுடன் இணைந்து நிற்கின்றார்கள்.
இது போன்ற மக்களுக்குஉதவி செய்யும் அமைப்புக்களை இதர புலம்பெயர் நாட்டு கிளைகளும் செய்ய இயங்க முன்வர ரெலோவின் தலைமை ஆழுமையை செலுத்த வேண்டும்.
-------------------------------------
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
21/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 19, (1)தமிழீழ விடுதலை இயக்கமும் இலங்கையில் முன்னாள் போராளிகளும்.

கடிதம் 19, (1)தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 18/01/2019, (கடிதம் 19, மாதம் 01, கிழமை 03)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

தமிழீழ விடுதலை இயக்கமும் இலங்கையில் முன்னாள் போராளிகளும்.
===============

நான் இந்த தலைப்பை இடுவதற்கான காரணம் இலங்கையில் தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டி வளர்த்த தோழர்களின் கருத்துக்களிலிருந்தும், அவர்களின் இன்றய வறுமை நிலைமைகளிலிருந்துமேயாகும்.
எந்தவித உதவிகளும் இன்றி கடின உழைப்பிலும் போதாமையுடன் வாழ்வு வாழ்கின்றார்கள், தாம் இந்த கடின வாழ்வை புலிகளின் கொலைகளைத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருப்பதாயும், தமது சுய முயற்சியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை கெளரவத்துடன் கூறுகிறார்கள்.
"நாம் மிகவும் அதிகமாக இயக்கம் பற்றி சிந்தனையுடன் வாழ்ந்து விட்டோம் ", போராட்டம் தோற்றது ஒருபக்கம் மக்களின் இழப்புக்கு பின்னரும் ரெலோ தமது மக்கள் பற்றிய சிந்தனையற்றே இருக்கின்றது என்பதே அவர்களது கருத்தாகும், இயக்கம் என்பது, அரசியல் கட்சி என்பது இதுவா சீ , சீ ஒரு விடுதலைப் போராட்டவாதிகள் என்பதற்க்கு அவமானம்.
முன்னாள் போராளிகளில் பலர் இன்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றார்கள், பலரை ரெலோ முன்னணி உறுப்பினர்கள் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு போகிறார்கள்.
இவர்களை நம்பி இவர்களுடன் இயக்கத்தில் இருந்தோம் எம்மை இழந்தோம், என முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
இது ஏன் ?
இந்த முன்னாள் ரெலோ உறுப்பினர்களுடன் அமைதியாக, ஆறுதலாக பேச முடியாது என்றால் நீங்கள் எப்படி அப்பாவிகள், ஏதிலிகளாக உள்ளவர்கள், நலிந்த பொது மக்களுடன் பேசுவீர்கள்.
நீங்கள் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம், கட்சி நடத்துகின்றோம் என்று கூறுவதை நம்பமுடியுமா?
முகநுாலிலும் , தனிப்படவும் பல தோழர்கள் ரெலோ பற்றிய வெறுப்புடன் கொதிப்புடன் இருக்கிறார்கள், இவர்கள் யாபேரும் உங்களுக்கு பக்கத்திலேயே உங்கள் இலங்கை பிரசைகளாகவே, உங்களுக்கு வாக்களிப் பவர்களாகவே வாழ்கின்றார்கள்.
நீங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் கடந்த காலத்தில் ரெலோவில் இயங்கியவர்களின் பெயர் விபரம் இன்னும் தயாரிக்க வில்லை என்றால் எப்படி மக்களுக்காக இயங்குகின்றீர்கள் என நம்புவது ?
கடந்த பல பல வருடங்களில் உங்களால் செய்யப்பட்ட மக்களுக்கான தினக் குறிப்புக்களை வெளிப்படுது வீர்களா ?
கட்சி, இயக்கம் மக்களினது மக்களுக்கு உங்கள் கடமைகளை வெளிப்படையாக முன்வைப்பீர்களா ?
இயக்கம், கட்சி என்பது தொழில் அல்ல மக்களை ஒருங்கிணைத்து மக்களுடன் இணைந்து மக்களுக்காக இயங்குவதே ஆனால் இன்று ரெலோ ஒரு அரசியல் சந்தர்ப்பவாதிகளாக தேர்தலுக்காக மட்டும் சென்று வாக்கு கேட்டு விட்டு மக்களை மறக்கும் மிதவாதிகளாகவே இயங்குகின்றீர்கள்.
இச் செயலுக்காக இயக்கம் கட்டப்படவில்லையே! , இச்செயலுக்காக இயக்கத்துக்கு உறுப்பினர்கள் தம் உயிரை அர்ப்பணிக்க வில்லையே !
தமிழீழ விடுதலை இயக்கத்தை புலிகளிடமிருந்து பாதுகாத்த பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள், இயக்கத்துக்காக எமக்கு உதவிசெய்த பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு இவர்களது மரணத்துக்கு முன்பாவது ரெலோ தனது நன்றியை தெரிவிக்குமா ???
உதாரணத்துக்கு புலிகளால் வட்டுக்கோட்டையில் கொல்லப்பட்ட பல தோழர்களில் ஒருவர் சங்கர்லால் அவரது கொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பம் 1986 லிருந்து இன்றும் கடின வாழ்வில் இருக்கிறார்கள் சங்கர்லால் பெயரால் தம் கெளரவத்துக்கு இழுக்கு வராமலும் வாழ்கிறார்கள்,
இது அவர்களது நிலைப்பாடு நீங்கள் ரெலோ மக்களுக்காக இயங்குகிறோம் என்பவர்கள் இந்த தோழர்களின் குடும்பத்தை ஒரு கணம் சிந்திக்க வேண்டாமா ? சங்ஙர்லால் போன்ற போன்ற பல தோழர்கள் பயிற்சி முகாம்களில் "நாம் போராட்டத்தில் இறந்தால் எமது இயக்கம் எமது குடும்பத்தை பாதுகாக்கும் என்று கூறியது உங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா ???
இவன் போன்ற தோழர்களின் குடும்பங்களை, முன்னாள் போராளிகளை நீங்களாக போய் ஏன் பறையக் கூடாது? அவர்களது நலம் விசாரிக்க கூடாது? தேவைகளுக்கு உதவக் கூடாது?
தோழர் சங்கர்லால் இறுதியாக சந்தித்த போது தனக்கு மிகவும் பிடித்தமான சேட்டை எனக்கு தந்து வெளியிடங்களுக்கு போக அனுப்பிய ஞாபகத்தையும் இணைத்து பதிவிட விரும்புகிறேன்.
இயக்கத்தில், பயிற்சி முகாம்களில் இந்தியாவில் , சென்னையில், சேலத்தில், காஞ்சிபுரத்தில் ஒன்றாக வாழ்ந்த தோழர்களை இப்படி கைவிடலாமா???
திட்டமிடலில், வாழ்விலும், வெற்றியிலும், போராட்ட துன்பத்தில் பங்கு கொண்ட தோழர்களை மறப்பது மனிதாபமா???
மக்களுக்காக இயங்கும் நீங்கள் உங்களுடன் இணைந்திருந்தவர்களை கைவிட்டு, குடும்பங்களை ஏதிலியாக்கி விட்டு இன்று அரசியல் கட்சி என்றும் புதிய உறுப்பினர்கள் என்றும் இருப்பதற்க்கு அத்திவாரமிட்ட தோழர்களை தவிக்க விடலாமா ??
அவர்களுக்கு துரோகம் பண்ணலாமா?
அவர்கள் ஏன் தமது உயிரை அர்ப்பணித்தனர்?
முன்னாள் தோழர்கள் எனப்படுவோரை நீங்கள் என்ன பாவித்து விட்டு எறிவதா தோழமை என்பது, தோழர்கள் என்பது, இவர்களுடன் போய் அமைதியாக பேசமுடியாத நீங்கள் விடுதலை இயக்கமா?
நிச்சயமாக நீங்கள் உங்கள் தனிப்பட்ட சுயலாபங்களுக்கே இயங்குகின்றீர்கள் இதை மறுதலிப்பதாயின் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், உங்கள் பக்கத்தே அவர்களும் வாழ்கின்றார்கள்.
"சிந்தியுங்கள்"
இவ் விடயங்களை உள்ளடக்கிய ரெலோவாக ரெலோ அமைப்பியலை, இயங்கியலை திருத்தியமைத்து இயங்க முடியாதா ? என்ன?
புதிய உறுப்பினர்கள் உங்களை நம்ப வேண்டுமா?
மக்களுக்காகன இயக்கமா?
மக்களுக்காகன அரசியலா?
எப்படி என்று முன்னாள் போராளிகளுக்கு உங்களை புரியவையுங்கள்.
இந்த தோழர்களுடன் பழகி வாழ்த தோழர்களில் பலர் தாம் இயக்கம், கட்சி எனப் பெருமை பேசிக் கொண்டிருப்பவர்கள் இந்த தோழர்களை சிந்திக்க வேண்டும் அந்த தோழர்களுக்கு உதவவும் இயங்க வேண்டும்.
===================
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
18/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்: uktelo@gmail.com, telolondon@gmail.com

Friday, 18 January 2019

கடிதம் 19, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

கடிதம் 19, (1)தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 18/01/2019, (கடிதம் 19, மாதம் 01, கிழமை 03)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
தமிழீழ விடுதலை இயக்கமும் இலங்கையில் முன்னாள் போராளிகளும்.
===============
நான் இந்த தலைப்பை இடுவதற்கான காரணம் இலங்கையில் தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டி வளர்த்த தோழர்களின் கருத்துக்களிலிருந்தும், அவர்களின் இன்றய வறுமை நிலைமைகளிலிருந்துமேயாகும்.
எந்தவித உதவிகளும் இன்றி கடின உழைப்பிலும் போதாமையுடன் வாழ்வு வாழ்கின்றார்கள், தாம் இந்த கடின வாழ்வை புலிகளின் கொலைகளைத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருப்பதாயும், தமது சுய முயற்சியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை கெளரவத்துடன் கூறுகிறார்கள்.
"நாம் மிகவும் அதிகமாக இயக்கம் பற்றி சிந்தனையுடன் வாழ்ந்து விட்டோம் ", போராட்டம் தோற்றது ஒருபக்கம் மக்களின் இழப்புக்கு பின்னரும் ரெலோ தமது மக்கள் பற்றிய சிந்தனையற்றே இருக்கின்றது என்பதே அவர்களது கருத்தாகும், இயக்கம் என்பது, அரசியல் கட்சி என்பது இதுவா சீ , சீ ஒரு விடுதலைப் போராட்டவாதிகள் என்பதற்க்கு அவமானம்.
முன்னாள் போராளிகளில் பலர் இன்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றார்கள், பலரை ரெலோ முன்னணி உறுப்பினர்கள் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு போகிறார்கள்.
இவர்களை நம்பி இவர்களுடன் இயக்கத்தில் இருந்தோம் எம்மை இழந்தோம், என முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
இது ஏன் ?
இந்த முன்னாள் ரெலோ உறுப்பினர்களுடன் அமைதியாக, ஆறுதலாக பேச முடியாது என்றால் நீங்கள் எப்படி அப்பாவிகள், ஏதிலிகளாக உள்ளவர்கள், நலிந்த பொது மக்களுடன் பேசுவீர்கள்.
நீங்கள் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம், கட்சி நடத்துகின்றோம் என்று கூறுவதை நம்பமுடியுமா?
முகநுாலிலும் , தனிப்படவும் பல தோழர்கள் ரெலோ பற்றிய வெறுப்புடன் கொதிப்புடன் இருக்கிறார்கள், இவர்கள் யாபேரும் உங்களுக்கு பக்கத்திலேயே உங்கள் இலங்கை பிரசைகளாகவே, உங்களுக்கு வாக்களிப் பவர்களாகவே வாழ்கின்றார்கள்.
நீங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் கடந்த காலத்தில் ரெலோவில் இயங்கியவர்களின் பெயர் விபரம் இன்னும் தயாரிக்க வில்லை என்றால் எப்படி மக்களுக்காக இயங்குகின்றீர்கள் என நம்புவது ?
கடந்த பல பல வருடங்களில் உங்களால் செய்யப்பட்ட மக்களுக்கான தினக் குறிப்புக்களை வெளிப்படுது வீர்களா ?
கட்சி, இயக்கம் மக்களினது மக்களுக்கு உங்கள் கடமைகளை வெளிப்படையாக முன்வைப்பீர்களா ?
இயக்கம், கட்சி என்பது தொழில் அல்ல மக்களை ஒருங்கிணைத்து மக்களுடன் இணைந்து மக்களுக்காக இயங்குவதே ஆனால் இன்று ரெலோ ஒரு அரசியல் சந்தர்ப்பவாதிகளாக தேர்தலுக்காக மட்டும் சென்று வாக்கு கேட்டு விட்டு மக்களை மறக்கும் மிதவாதிகளாகவே இயங்குகின்றீர்கள்.
இச் செயலுக்காக இயக்கம் கட்டப்படவில்லையே! , இச்செயலுக்காக இயக்கத்துக்கு உறுப்பினர்கள் தம் உயிரை அர்ப்பணிக்க வில்லையே !
தமிழீழ விடுதலை இயக்கத்தை புலிகளிடமிருந்து பாதுகாத்த பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள், இயக்கத்துக்காக எமக்கு உதவிசெய்த பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு இவர்களது மரணத்துக்கு முன்பாவது ரெலோ தனது நன்றியை தெரிவிக்குமா ???
உதாரணத்துக்கு புலிகளால் வட்டுக்கோட்டையில் கொல்லப்பட்ட பல தோழர்களில் ஒருவர் சங்கர்லால் அவரது கொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பம் 1986 லிருந்து இன்றும் கடின வாழ்வில் இருக்கிறார்கள் சங்கர்லால் பெயரால் தம் கெளரவத்துக்கு இழுக்கு வராமலும் வாழ்கிறார்கள்,
இது அவர்களது நிலைப்பாடு நீங்கள் ரெலோ மக்களுக்காக இயங்குகிறோம் என்பவர்கள் இந்த தோழர்களின் குடும்பத்தை ஒரு கணம் சிந்திக்க வேண்டாமா ? சங்ஙர்லால் போன்ற போன்ற பல தோழர்கள் பயிற்சி முகாம்களில் "நாம் போராட்டத்தில் இறந்தால் எமது இயக்கம் எமது குடும்பத்தை பாதுகாக்கும் என்று கூறியது உங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா ???
இவன் போன்ற தோழர்களின் குடும்பங்களை, முன்னாள் போராளிகளை நீங்களாக போய் ஏன் பறையக் கூடாது? அவர்களது நலம் விசாரிக்க கூடாது? தேவைகளுக்கு உதவக் கூடாது?
தோழர் சங்கர்லால் இறுதியாக சந்தித்த போது தனக்கு மிகவும் பிடித்தமான சேட்டை எனக்கு தந்து வெளியிடங்களுக்கு போக அனுப்பிய ஞாபகத்தையும் இணைத்து பதிவிட விரும்புகிறேன்.
இயக்கத்தில், பயிற்சி முகாம்களில் இந்தியாவில் , சென்னையில், சேலத்தில், காஞ்சிபுரத்தில் ஒன்றாக வாழ்ந்த தோழர்களை இப்படி கைவிடலாமா???
திட்டமிடலில், வாழ்விலும், வெற்றியிலும், போராட்ட துன்பத்தில் பங்கு கொண்ட தோழர்களை மறப்பது மனிதாபமா???
மக்களுக்காக இயங்கும் நீங்கள் உங்களுடன் இணைந்திருந்தவர்களை கைவிட்டு, குடும்பங்களை ஏதிலியாக்கி விட்டு இன்று அரசியல் கட்சி என்றும் புதிய உறுப்பினர்கள் என்றும் இருப்பதற்க்கு அத்திவாரமிட்ட தோழர்களை தவிக்க விடலாமா ??
அவர்களுக்கு துரோகம் பண்ணலாமா?
அவர்கள் ஏன் தமது உயிரை அர்ப்பணித்தனர்?
முன்னாள் தோழர்கள் எனப்படுவோரை நீங்கள் என்ன பாவித்து விட்டு எறிவதா தோழமை என்பது, தோழர்கள் என்பது, இவர்களுடன் போய் அமைதியாக பேசமுடியாத நீங்கள் விடுதலை இயக்கமா?
நிச்சயமாக நீங்கள் உங்கள் தனிப்பட்ட சுயலாபங்களுக்கே இயங்குகின்றீர்கள் இதை மறுதலிப்பதாயின் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், உங்கள் பக்கத்தே அவர்களும் வாழ்கின்றார்கள்.
"சிந்தியுங்கள்"
இவ் விடயங்களை உள்ளடக்கிய ரெலோவாக ரெலோ அமைப்பியலை, இயங்கியலை திருத்தியமைத்து இயங்க முடியாதா ? என்ன?
புதிய உறுப்பினர்கள் உங்களை நம்ப வேண்டுமா?
மக்களுக்காகன இயக்கமா?
மக்களுக்காகன அரசியலா?
எப்படி என்று முன்னாள் போராளிகளுக்கு உங்களை புரியவையுங்கள்.
இந்த தோழர்களுடன் பழகி வாழ்த தோழர்களில் பலர் தாம் இயக்கம், கட்சி எனப் பெருமை பேசிக் கொண்டிருப்பவர்கள் இந்த தோழர்களை சிந்திக்க வேண்டும் அந்த தோழர்களுக்கு உதவவும் இயங்க வேண்டும்.
===================
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
18/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்: uktelo@gmail.com, telolondon@gmail.com

Tuesday, 15 January 2019

கடிதம் 18, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

கடிதம் 18, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 16/01/2019, (கடிதம் 18, மாதம்01, கிழமை 03)

திரு செல்வம் அடைக்கலநாதன் (பா.உ),(பிரதி அமைச்சர்)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை பாராளுமன்றம்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,
இலங்கை.

தங்களால் அண்மையில் ஏற்ப்படுத்தப்பட்ட மாற்றம்-திருத்தத்தை சர்வதேச குழுவை கலைத்தமையை வரவேற்கிறேன்.
புலம்பெயர் நாடுகளில் ரெலோ என்ற பெயரில் மக்களையோ உதவிகளுக்கான தேடல்களையோ செய்யாது ஒரு ரீ வடை குறுப்புக்களாக மேலும் ஒரு காவாலிகளின் நடத்தைகளாக இயங்கிக் கொண்டிருந்தவர்களை அவர்களது புத்திசுவாதீனமான நிலைக்கு இறக்கி விட்டு, அவர்களை மக்களுக்காக சிந்தி அல்லது ஒதுங்கி நில் நிலைமைகளை உருவாக்கி ரெலோ கட்சி தன்னை சீரமைத்துக் கொண்டுள்ளும் முயற்சியாகவே நான் கருதுகிறேன்.
கடந்த காலங்களில் இவர்களின் நடத்தைகள் பற்றி விசேடமாக uk யில் நடத்தைகள் பற்றி ஆயிரத்தில் ஒரு கடிதமாக, எனது அனுபவமாக நிச்சயம் வெளிவரும்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்களை புலிகளுக்கு பின்னர் இலங்கை தமிழ் மக்களுக்கான இயங்கும் வல்லமை கொண்ட அமைப்பினூடாக கட்டமைப்பை உருவாக்க தவறி விட்டீர்கள், இதை இனிமேல் உருவாக்குவது என்றால் நிறைய பிராயச்சித்தங்களை செய்ய வேண்டியிருக்கும், நிறையவே பதவி
நிலைகளிலுருந்து சாதாரண மக்கள் நிலைக்கு இறங்காது எந்த கட்சிகள் இயக்கங்களாலும் செய்ய முடியாது.
கட்சி மக்கள் அமைப்புக்களாக மாற வேண்டியிருக்கும்.
1980களில் ஒரு இயக்க உறுப்பினரை உள்வாங்கும் போது அவரை எத்தனை முறை சந்தித்து பேசினோம், எத்தனை தடவைகள் போராட்டம் பற்றி பேசியிருந்தோம், என்ன விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறியிருந்தோம் இது போன்றதொரு பயிற்சியை மேலும் ஒருமுறை இலங்கையில் தமிழ் மக்களின் ஐனநாயக மேம்பாட்டிக்காக செய்யவேண்டும், அதே போன்று புலம்பெயர் தேசத்திலும் தமிழ் மக்களை அவர்கள் வீட்டில், கோயில்களில், பொது இடங்களில் சந்தித்து பேசி மக்களுக்காக அணிதிரட்ட வேண்டியுள்ளது.
இது மக்களுக்காக இயங்க விரும்பும் இயக்க உறுப்பினர்களின் கடமையாகவும் இருக்கும் இதனூடாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு உதவிபுரியும் அமைப்பாக, உப அமைப்பாக இயங்க வேண்டும், இதுவே ஒரே வழியும் ஆகும்.
புலம்பெயர் நாடுகளில் ரெலோ உறுப்பினர்களின் நடவடிக்கைகள் என்ன? ரெலோ அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பதாயின் அவர்களின் கடமைகள் என்ன? பொறுப்புக்கள் என்ன? இலங்கை தமிழ் மக்களை நோக்கிய அவர்களது செயற்பாடுகள் என்ன?, கடந்த காலங்களில் இவர்கள் என்ன பொறுப்பு மிக்க கடமைகளில் ஈடுபட்டார்களோ அதன் பிறகு ரெலோவின் விசேட புலம்பெயர் உறுப்புரிமைகள் வழங்கப் படலாமே தவிர இலங்கையில் இலங்கை சட்டப்படி இயங்கும் கட்சியின் உறுப்பினர்க்கு ஐரோப்பிய நாட்டு பிரசைகளுக்கு கொடுப்பதன் மூலம் வேறு சிக்கல்களையே தோற்றுவிக்கும், இது புலம்பெயர் நாட்டு நீதிமன்றுக்கு ரெலோ பதில் வேண்டிய நிலைகளை தோற்றுவிக்கலாம் என்பதை மனதில் கொள்க !!!
புலம் பெயர் ரெலோக்களில் பலர் பொறுப்புணர்வற்ற செயல்கள், பேச்சுக்களிலேயே காலத்தை கடத்தி இன்று ரெலோ இலங்கையில் எடுத்த முடிவினால் தங்களின் காவாலித்தனங்கள் அடக்கப்பட்டதை உணர்கின்றார்கள், இது பொறுப்பு வாய்ந்த telo ambassador களை உருவாக்கும் என நான் நம்புகிறேன் அது மட்டுமல்ல ரெலோவின் தலைமைத்துவத்தையும் உயர்த்தும் எனவும் நம்புகிறேன்.
அதேவேளை எனது எழுத்துக்கள் பற்றி கேள்விகள் எழுப்பியவர்களுக்கு எனது பதிலையும் விரைவில் பதிவு செய்வேன்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
16/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்: uktelo@gmail.com, telolondon@gmail.com

Thursday, 10 January 2019

கடிதம் 17, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

கடிதம் 17, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"

எழுச்சி, 14/01/2019, (கடிதம் 17, மாதம்01, கிழமை 03)

திரு செல்வம் அடைக்கலநாதன் (பா.உ),(பிரதி அமைச்சர்)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை பாராளுமன்றம்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,
இலங்கை.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் இலட்சினை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடமை.

அண்மைக் காலங்களில் தங்களால் இயக்கத்தின் தலைவராக வெளியிடப்பட்ட கருத்தை மறுதலிக்க விரும்புகிறோம்.
ரெலோவின் சின்னம் இலங்கை அரசுக்கு எதிராக போராட எழுந்த தங்கத்துரையின் தலைமையில் உருவான இயக்கத்தின் சின்னம், இந்த சின்னம் இலங்கை அரசில் அங்கம் பெற்று பதவிக்காகவும் , புகழுக்காகவும், லஞ்சத்திற்க்கும் பாவிப்பதற்க்காக உருவாக்கப்பட்ட சின்னம் அல்ல, அண்மையில் தாங்களாள் வெளியிட்டப்பட்டதாக ஊடகங்களில் வரும் கருத்து, இச்சின்னத்தை பிரான்சு,ஐேர்மனியில் ரெலோ அமைப்பின் கிளைகளாக இயங்கும் உறுப்பினர்களினால் பாவிக்க முடியாது என வெளியிடப்பட்ட கருத்தை நாம் தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்பிய, போராடிய, சிறை சென்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ரெலோவின் ஆழுமையற்ற தலைமைத்துவத்தின் (தலைவரின் அல்ல) வெளிப்பாடேயாகும்.
இயக்கத்துக்காக உழைத்தவர்களை இவ்வாறு அவமானப்படுத்துவது விடுதலை இயக்கம் என்ற பெயருக்கு அவமானமாகும். அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தில் இன்றர உறுப்பினர்களோ இல்லையோ என்பதல்ல முக்கியம் அச் சின்னம் யாரும் பாவித்து விடுதலை இயக்கத்தின் தமது அனுபவத்தை தெரிவிக்கும் உரிமையுண்டு, இல்லை இதை மறுதலித்து இலங்கையில் சட்ட நடவடிக்கை என நீங்கள் தெரிவு செய்தால் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அச் சின்னம் இலங்கை அரசின் ஒடுக்கு முறைக் கெதிரான சின்னம் பற்றி இலங்கை அரசிடம் நீதி கேட்டு போவது பற்றி தங்ஙத்துயையின் நீதிமன்ற உரையை மீள வாசியுங்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் சின்னம் இன்றய புதிய சின்னத்தை இன்று நீங்கள் கோரினாலும் பழைய ஆரம்பகால சிற்னத்துக்கும் எமக்கும் நிறையவே உரிமையுண்டு.
உதாரணமாக அச்சின்னத்தை கொண்ட பத்திரிகையை, அச்சின்னத்தின் இயக்கத்துக்காக இயங்கியவர்களை இலங்கை நீதிமன்றம் தனது நாட்டுக்கு எதிராக இயங்ஙியவர்களாகவே கருதி இலங்கை சட்டப்படி பல வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
அந்த இலங்கை நீதிமன்றமே மீள அவரை பாவிக்க வேண்டாம் என உத்தரவு போடுமானால் பரிகாசம் வேறு இருக்காது.

தமிழீழ விடுதலை இயக்கம் என்பது ஒன்று, தமிழீழ விடுதலை இயக்க கட்சி என்பது இன்னொன்று, கட்சியில் அங்கம் வகிக்காதவர்கள் இயக்கம் மட்டுமே அது அவர்கள் இறக்கும் வரையில் அவ் இயக்கமே, ஆனால் நீங்களும் பலரும் இன்று தமிழீழ விடுதலை இயக்க கட்சியும் அதன் தேர்தல் வாக்கு பிச்சை கேட்குப் சின்னம் வெளிச்ச வீடு உடன்படுகிறேன் வெளிச்ச வீட்டை யாரும் பாவித்தால் இலங்கை நீதிமன்றம் பாவிக்க வேண்டாம் எனகோர முடியும். அது இன்று கட்சியில் சிலரது உழைப்புக்கான கம்பனி logo என்பதில் மாற்று கருத்து இல்லை.

கருத்து பகிர்வு, இயக்க உரிமை, கட்சி உறுப்புரிபை போன்ற விடயங்களில் மிகவும் குழப்பமாகவே கருத்து வெளியிடுவது புத்திசாலித்தனமானது அல்ல.
கருத்து பகிர சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தியமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கருத்து சுதந்திரத்தின் ஆழமான உரிமைகளை கட்சி உறுப்பினர்களும் புரிந்து கொள்வது அல்லது புகட்டுவது அவசியமானது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக "தமிழீழ விடுதலை இயக்கம்"(கட்சி அல்ல) தொடர்ந்து இயங்க வேண்டும், அல்லது இயங்க ஊக்குவிப்புக்கள் வழங்க வேண்டும், அந்த ஐனநாயக போராட்டம் இலங்கையில் இயங்குவதே தங்கத்துரை குட்டிமணி சிறீசபா போன்றோருக்கும் அவர்கள் மதித்த தமிழ் மக்களுக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.
நீங்கள் குறிப்பிடும் வைபர் குறுப்புக்களை உங்களின் கையாட்கள் லண்டனிலிருந்து telo மத்தீய கமிட்டி உறுப்பினர்களை அவற்றை நடாத்தி அதன் மூலம் பிரித்தானிய பிரசைகளை மிரட்டியுள்ளது பொலீசுக்கு அவர்கள் பெயர் விலாசம், தொலைேசி எண்கள் வழங்கப்பட்டு பதிவு செய்யப்பட்ணுள்ளதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல !!!
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
14/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

விசாரணை, கேள்வி,தர்க்கித்தல், விவாதித்தல், விமர்சித்தல் இவை மூலமே சமுகம் முன்னேற்ற மடையும்.

விசாரணை, கேள்வி,தர்க்கித்தல், விவாதித்தல், விமர்சித்தல் இவை மூலமே சமுகம் முன்னேற்ற மடையும்.
--------------------------
சரி பிழை எது? என்ன? என்பவை விசாரித்து ஆய்வு செய்யப்படல் வேண்டும் பத்திரிகைகள் தவறு என்றால் பத்திரைகள் மீது கண்டனம் எழுப்பப்படல் வேண்டும்.சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படல் வேண்டும்.
போலித் தேசியம் பேசும் கட்சிகளான ரெலோவும் தமிழரசும் அரசியலா செய்கின்றது,
இவர்களுக்கு அரசியலுக்கும் வாழ்வுக்குமான தொடர்பு புரியவில்லை
எங்கே லஞ்சம் கிடைக்கும் என நாக்கை தூங்க விட்டு திரிகின்ற நாய்கள்.
கஞ்சா ஊரில் விற்க்கப்பட்ட சிட்டுக்குருவி, மதன லேகியமக போன்ற லேகியங்களிலும் இருந்தது.
கஞ்சா கெட்ட பொருள் அல்ல, எதுவுமே அளவுக்கு மீறிறால் அமிர்தமுமக நஞ்சே,
ஆசியர்கள் சோறு சாப்பிடுவது போல் கஞ்சாவை பாவிப்பதே தவறு, எப்படி குடித்தல் தவறு என வந்ததோ அதே போல் , சமுக கட்டமைக்கப்பட்டுள்ள முறை, சட்டம் சமூக வழக்கம், தலைமைத்துவம் இல்லாத சமூகம்,
இவைகளே எமது பிரச்சனைகள்.
தமிழரின் கோவிலை உடைத்து மசூதி கட்டியவன், சட்டத்தை தனது கையில் தனது விருப்பப்படி மோசடி செய்தவன், தனக்கு சார்பாக நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தனது அதிகாரங்களை பயன்படுத்தி நீதிபதியை மாற்றியவன்.
இவ்வளவையும் தானேசெய்தது என பொதுவில் கூறியவன்,
தமிழர் விரோதி மதசார் அடிப்படைவாதி கிழக்கு மாகாண ஆளுனர்.
தமது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்காத தமிழரசு, ரெலோ என்ன பகல் கனவா கண்டுகொண்டிருக்கின்றது அல்லது உங்களுக்கும் கிசுபுல்லா லஞ்சம் தந்து விட்டானா ?
ஆளுனர் கிசுபுல்லாவின் தமிழ் விரோதமும் இசுலாமிய விரிவாக்கமும்.
தமிழர் தரப்பு குறிப்பாக தமிழரசு, ரெலோவுக்கு இசுலாமியர்களால் லஞ்சம் கொடுக்கப்பட்டே இந்த ஒப்பேற்றல் நடைபெறுகின்றது. என ரெலோ மத்திய கமிட்ணி உறுப்பினர் கூறினார்.
தமிழ் மக்களுக்காக பெளத்த துறவிகளே பேசுகின்றனர், தமிழ் தலைவர்கள் அல்ல, அவர்கள் முசுலீம்களிடமிருந்து லஞ்சம் பெற்று தமது குடும்பத்தை மட்டும் பேணுகின்றனர்

தோழர் சுந்தரம் 37வது நினைவுதினம்!


தோழர் சுந்தரம்

===============தோழர் சுந்தரம் 37வது நினைவுதினம்!


"புதியபாதை "ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 37வது நினைவுதினம் இன்றாகும்.
1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலை புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும்.
தோழர் சுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் விடுதலை மூலமே அடைய முடியும் என்ற கோட்பாட்டுடன் "புதியபாதை" ஊடாக பொதுவுடமை கொள்கைளையும், புரட்சிகர சிந்தனையையும் ஊட்டிய சிறந்த சிந்தனை சிற்பி.
விடுதலை போராட்டம் வெறுமனவே ஆயுதப்போராட்டத்தில் மத்தியில் தங்கியிருக்க முடியாது, மக்களை அரசியல் மயப்பபடுத்தி முழுமையான மக்கள் போராட்டம் மூலமே அடையமுடியும் என்பதில் அசைக்கமுடியாத தன்னம்பிகையை கொண்ட வீரன். தோழர் சுந்தரம் ஊடகவியலாளர், பொதுவுடமைவாதி, சிறந்த இராணுவ தளபதி என்ற முற்பரிமாணம் கொண்ட செயல்வீரனாகவே செயலாற்றிய வீரன் ஆகும்.
தமிழீழ போராட்டத்தினை முன் நகர்த்திய முதன்மை வீரர்களில் ஒருவராக செயலாற்றியவர். பத்திரிகை துறையில் புதிய புரட்சிகர சிந்தனையை ஊட்டி எம்மைப்போன்ற ஆயிரக்கணக்கான வீரர்களிற்கு பொதுவுடமை கொள்கையையும், புரட்சிகர போதனைகளையும் புதியபாதை என்ற சிறந்த பத்தரிகை ஊடாக எமக்கு ஊட்டிய சிறந்த ஊடகவியலாளர்.
ஆரம்பத்திலேயே பொதுவுடமை கொள்கை மீது ஈடுபாடு கொண்டிருந்த சுந்தரம், வடக்கு, கிழக்கு எல்லைகளை கடந்து மலையகத்தில் வாழும் மக்களின் விடுதலை மீதும் கரிசனை கொண்டு அவ் மக்களின் அடிமை வாழ்விற்கு எதிராகவும் தனது ஆழமான கருத்துக்களை கொண்டிருந்தவர்.
ஏகாதிபத்திய நாடுகளின் அதிகாரவெறியினால் மூன்றாம்தர நாடுகள் எவ்வாறு சுறண்டப்படுகின்றன என்பதை தெளிவாகவே எடுத்து கூறிய சிறந்த பொதுவுடமை கொள்கைவாதி.
இன்றைய காலகட்டத்தில் இவ் பரிமாணங்களை கொண்ட சிறந்த ஊடாகவியலாளரையோ, பொதுவுடமைவாதியையோ, சிறந்த தளபதியை காணமுடியாத நிலையில், அன்று இவ் பரிமாணங்களை கொண்ட தளபதியாக, பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் எவ்வாறு மக்கள் பணியாற்றியவர் என்பது நாம் கூறத்தேவையில்லை, அவரது கருத்துக்களும், எண்ணங்களும் பல ஆயிரக்கணக்கான பொதுவுடமைவாதிகள், தோழர்கள் மத்தியில் உருவாக்கி சென்றிருக்கும் என்பதில் எந்த ஜயமுமில்லை.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் என்ற புரட்சிகர விடுதலை அமைப்பை தோற்றுவித்த ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக இருந்ததுடன், கழகத்தின் முதல் இராணுவதளபதியாகவும் இருந்து வந்தவர்.
செயலதிபர் உமாமகேஸ்வரன் என்ற மக்கள் போராட்டத்தின் சிறந்த தளபதியுடன் கைகோர்த்து மக்கள் போராட்டத்தை முன்நகர்த்திய சிறப்பான போராளியும் ஆவார். கட்சியின் இராணுவ கட்டமைப்பை ஒருபுறமாகவும், புரட்சிகர சிந்தனையை எழுதுகோல் மூலமும் எடுத்துக்கூறிய தளபதியும் ஆவார்.
கழகத்தின் இராணுவ படைப்பிரிவை வலுப்படுத்தும் வண்ணம் கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஆயுதங்களை சேகரிக்கும் நோக்குடன் ஆனைக்கோட்டை காவல் நிலையத்தை தாக்கியழித்து எதிரியின் ஆயுதங்களை கைப்பற்றியே கழகத்தின் இராணுவ பிரிவுக்கு வலிமை சேர்த்த தளபதியும் ஆவார்.
இன்றைய நாள் இல்லை எந் நாளும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவரே தோழர் சுந்தரம் ஆகும்.


வெட்கம் ஒரு இனம் 60 வருடம் போராட்டம் நடத்தி தோற்றுவிட்டு தோழர் என்ற சொல்லுக்கு கருத்து தேடுகிறது,

போராட்டம் என்ற சொல்லின் அர்த்தம் புரியாமலே போராட்டம் நடந்து முடிந்துள்ளது.

வெட்கம் ஒரு இனம் 60 வருடம் போராட்டம் நடத்தி தோற்றுவிட்டு தோழர் என்ற சொல்லுக்கு கருத்து தேடுகிறது, அவ்வளவுக்கு நாம் கூலிப்படைகளாகவே இயங்கியுள்ளோம் என்பதை புரிவோம்,

தோழர் : ஒரே கொள்கைகளைக் கொண்ட மனிதன் என்ற அடையாளத்தை தவிர வேறு எந்த வேறுபாட்டுக்கும் தம்மை ஆட்படுத்தாத சமூக இயக்கத்தை புரிந்து சமுகத்தை அடுத்த உயர் நிலைக்கு மனிதனம் மேம்பட்ட கலாச்சாரத்துக்குள் இட்டுச் செல்ல சமூகத்தில் மக்ஙளால் உருவாக்கப்பட்ட சோசலிச அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தம்மிடையே உறவாட , தோழமை கொள்ள, இணைந்து இயங்க மிக இலகுவான சொல்லாடல் "தோழர்"
தோழர் என்றபதம் தமிழுக்கு தோழமையிலிருந்து உருவாக்கியவர்கள் தமிழ் கம்ரூனிசட்டுக்களே.
ரெலோவில் தோழர் என்ற சொல் நக்கல் அடிக்கவே பாவிக்கப்பட்டது.