Saturday 9 May 2020

கடிதம் 29 - லண்டனில் ரெலோவின் வன்முறைப் பேச்சுக்களின் பின்னணி என்ன?

கடிதம் 29 - லண்டனில் ரெலோவின் வன்முறைப் பேச்சுக்களின் பின்னணி என்ன?
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"

எழுச்சி, 08/02/2019, (கடிதம் 29, மாதம்02, கிழமை 02)

தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

====================
லண்டன் ரெலோவின் வன்முறைப் பேச்சுக்களின் பின்னணி என்ன?
===================
தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களில் சிலர் வன்முறையான பேச்சுக்களை பேசியும் மிரட்டியும் எழுதி அவற்றின் பிரதிகள் இயக்கத்தின் கிளை உறுப்பினர்களால் பிரதிகள் வெளிப்படுத்தப்பட்டு பொலீசில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதை ரெலோ கட்சி அறியும் என நம்புகிறேன்.
இது இலங்கையில் இயங்கும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஐரோப்பிய நாட்டு பிரசைகள் மீது செய்யும் அத்து மீறல்களாகும் இவை மீறிச் செல்லும்போது இவர்களில் சிலர் சட்டப்படி தண்டனை பெறும் நிலையும் உருவாகலாம்.
இதற்கான காரணங்களாக
1) தமது வாழ்வியல் தோல்விகள் முதாவதாகவும், புலம்பெயர்நாடுகளுக்கு வந்த போதிலும் தாம் வாழும் சூழ்நிலை மாறியுள்ளதை அறியாதவர்களாக வாழ்கின்றார்கள்.
2) உறுப்பினர்களில் சிலர் 50 வயதுகளை கடந்த போதும் வயதுக்கு ஏற்ற ஆழுமையை வளர்த்துக் கொள்ள தவறியும் உலகில் ஏற்ப்பட்ட மாற்றங்களை புரிய தவறியும் , அரசியல் இயக்கு முறையில் ஏற்ப்படும் விமர்சனங்கள் தர்க்கங்களையும் அதன் அவசியம் பற்றியும், அவை பற்றிய புரிதல் இன்றியும், அறிவை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கும் ஒரு மந்த நிலையில் தம்மை வைத்திருப்பதும் ஒரு காரணமாகும்.
இவர்களுடன் அரசியல் இயக்கம் பற்றிய விவாத தர்க்கங்களை செய்யும் போது இவர்கள் இத்த குணாம்சங்களை மிக எளிதாக பொது வெளியிலும் ரெலோ உள்ளக கருத்து பரிமாறலிலும் வெளிக் காட்டுகிறார்கள். இவை கட்சிக் கிளைக்கு வெளியே பரிகாசமாக பரிமாறப்படுகிறது.
இவை பற்றி ரெலோ உறுப்பினர்கள் பலர் என்னுடன் பேசியுள்ளார்கள்.
இந்த குணாம்சத்தில் மாற்றமடையாதது என்பது மட்டுமல்ல ரெலோ இயக்கத்தை ஒரு சிறிய சுற்று வட்டத்துக்குள்ளேயே வைத்திக்கவுமே செய்கின்றது.

ரெலோ தனது சுற்றை வியாபித்து வளர்த்துக் கொள்ளாததின் காரணம் இதுவே.

3) இவற்றை விட புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் தாம் லண்டனில் வாழ்வதால் மட்டும் தாம் அறிவாளியாக ஏமாற்றும் பாணிஒன்று உள்ளது, இந்த நடத்தைகளை பல ஊர்ச்சங்கங்ஙளிலும், ரெலோவில் சிலரிலும் அவதானித்துள்ளேன், குறிப்பாக இந்த நடத்தையை ரெலோவின்
மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தமக்கு லண்டனிலிருந்து உபதேசிக்கப்படும் உபத்திரங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளீர்கள் இது உங்களுக்கு மட்டுமல்ல இதர ஐரோப்பிய நாடுகளில் வாழும் ரெலோ உறுப்பினர்களும் இந்த uk காய்ச்சலை பொறுக்க முடியாது உள்ளதை என்னுடன் பேசியுள்ளார்கள் இந்த விடயத்தில் ரெலோ uk கிளையின் பொறுப்பாளர் சாம் இதர கிளை உறுப்பினர்கள் மற்றும் நாட்டில் ரெலோ உறுப்பினர்களுடன் பேசும் தொனி பற்றி பேசியுள்ளீர்கள் அத்துடன் இவருக்கும் ரெலோ உறவு பற்றியும் பேசியுள்ளீர்கள்.
இவர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்க்கு பதிலாக மேலும் பிரச்சனைகளை தன்னை முன்னிலைப்படுத்தி அதை கையாள்பவர் என நீங்கள் என்னுடன் உரையாடியுள்ளீர்கள், இவர்களது பாணியில் தனது சுய நாடகத்துக்காக தோழர்களை துரோகிகள் ஆக்கி அமைப்பை வளர்சியை தடுப்பதை காண்கிறீர்கள்.
இவர் பற்றிய பல தோழர்களின் கருத்துக்களை நான் வைத்திருக்கிறேன்.
அது மட்டுமல்ல ரெலோ ஒன்றினால் மட்டும் தமிழர் அரசியலை தீர்கமுடியாது என்பதை உணராது இதர இயக்கங்கள் அமைப்புக்களுடன் தொடர்பாடல்களை வைத்திருப்பவர்களை அவர்களது உளவாளிகள் என்றும், தமது சுய நாடகங்களை விமர்சிப்பவர்களை அரசின் உளவாளிகள் என்றும் பட்டம் சூட்டியுள்ளனர், இந்த பட்டம் சூட்டலில் முதலில் சாள்சும் பின்னர் நிமோவையும் பின்னர் கீரனையும் பின்னர் கனடா செட்டியையும் நித்தியண்ணரையும் அண்மைக் காலங்களில் என்னையும் பட்டம் சூட்டியுள்ளனர்.
இதன் காரணமாகவே நான் எனது சுயகெளரவத்தையும் மரியாதையையும் பாதுகாக்க இந்த காவாலித்தனங்களிலிருந்தும் இவர்களிடமிருந்தும் ஒதுங்கினேன்.
அமைப்பியல் பற்றிய தேடல் அற்றவர்கள், தோழர்களை, மக்களை இணைக்கத் தெரியாதவர்கள், பிரச்சனைகளை ஊதி தாம் தமது சுயிச்சைக்காக இயங்குபவர்கள், பொது என்பதன் தார்பகபரியம் புரியாதவர்கள்.
இந்த தவறுகளும் வரலாற்றில் பதியப்படல் வேண்டும்.
(இவை பற்றி எனது "ரெலோ லண்டன் "என்ற விபரமான கடிதம் பின்னர் வரும்)

இவற்றுக்கு மேலாக இதர ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தவர்களில் சிலர் லண்டனில் வாழ்ந்தால் தான் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதாகவும் ஆங்கிலத்தில் தமது பிள்ளைகள் படித்தால் மட்டுமே படிப்பாக இருக்குப் என்ற அறிவு முதிராதவர்களின் நினைப்பு அவர்களை நாம் வாழ்ந்த நாடுகளிலிருந்து லண்டனுக்கு கொண்டு வந்தது அதன் பின்னர் தமது லண்டன் காய்ச்சலை காட்டுவதற்க்கு லண்டன் கிளை அமைப்பை பயன் படுத்தி வீறாப்புக்களை எடுத்து விடுகிறார்கள்.
லண்டனில் ரெலோ கிளை உறுப்பினர்கள் புலம்பெயர் நாட்டிலேயே வாழப்போகிறவர்கள் இலங்கைக்கு வந்து வெய்யிலிலும், கிணற்றில் குளித்து வாழப்போகிறவர்கள் இல்லை ஆனால் தாமே மக்களுக்காக போராடுபவர்கள் போன்று, மக்களின் ஆணையை பெற்று இயக்கத்தை நடாத்துபவர்கள் போன்று ஒரு போலியாக, நாடகத்தை நடாத்துகிறார்கள், யாரும் இயக்கம் பற்றி பேசினால், எழுதினால் இவர்களுக்கு ஒரு பொய்யான கோபம் எடுப்பார்கள், அது சிலவேளை உங்ஙளுக்கு புரியாமல் இருக்கலாம், இதை இதர ஐரோப்பிய நாடுகளில் வாழும் ரெலோ தோழர்கள் பலர் கூறியுள்ளீர்கள்,இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் வந்ததவர்கள் ஆங்கிலத்தில் நடிக்கவே விரும்பி வந்த முட்டாள்கள் இவர்கள்.

இவற்றை விட இவர்களுக்கு சுதியேற்ற நீங்கள் இலங்கையிலிருந்து இவர்களுக்கு பொறுப்பாளர்கள் என போலிகளை அள்ளி வீச அவர்களும் போலியாகவே மக்களுக்கு ஏதும் செய்யாமல் உங்களுக்காக நடிக்கிறார்கள்.
இவர்களது முகநூலில் இவர்களது கருத்துக்களை பார்த்தால் இவர்களது மண்டையை புரிந்து கொள்ளலாம்.

இது கடந்த கால வரலாற்றில் இயக்கத்தின் area பொறுப்பாளர்களின் சேட்டைகளுக்கு ஒப்பானது, களவு தீர்க போனவர்கள்,கள்ள சாராயம் பிடிக்க போனவர்களின் சேட்டைகளுக்கு ஒப்பானதே எனக் கூறி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் மக்களின் நலனை முன்நிறுத்தி பங்காற்றுமாறு கேட்டு புலம்பெயர் ரெலோ இல. தமிழ் மக்களுக்கான செயற்திட்டங்களில் பங்களிக்கும் ஆலோசனைகளை வழங்குங்கள் எனவும் கேட்டு தமிழீழ விடுதலை இயக்கம் பற்றிய எனது அனுபவ இக்கடிதத்தை முடித்துக் கொள்கின்றேன்.

எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
08/02/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

Tuesday 12 February 2019

கடிதம் 30 - ஆலால சுந்தரம், தர்மலிங்கம் இரு தலைவர்களினது கொலைகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.

கடிதம் 30 - தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் ஆலால சுந்தரம், தர்மலிங்கம் ஆகிய இருவர்களையும் கொலை செய்தது தமிழீழ விடுதலை இயக்கம்(telo), அவற்றிக்காக நான் பொது மன்னிப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியிடமும் அவர்களின் உறவினர்கள் மற்றும் தர்மலிங்கமக குடும்பத்தினரிடம், திரு சித்தார்த்தன் அவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 12/02/2019, (கடிதம் 29, மாதம்02, கிழமை 03)

தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

====================

ஆலால சுந்தரம், தர்மலிங்கம் இரு தலைவர்களினது கொலைகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்.
===================

தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மதிப்பிற்குரிய தலைவர் தர்மலிங்கம் குடும்பத்தினரிடம் குறிப்பாக திரு சித்தார்த்தன் அவர்களிடம் இக்கொலைக்குப் பொறுப்பாக இருந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மன்னிப்பு கோருகின்றேன்.
அக்காலத்தில் நேரடியாக இயக்க நடவடிக்கைகளில் தொடர்பில்லாது சிறையிலிருந்த போதிலும் நான் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினராக இருந்தேன்.
அன்று அந்த தலைவர்களின் எந்த அரசியலை ரெலோ எதிர்த்து கொலை செய்ததோ இன்று அதே அரசியலை செய்யும் ரெலோ அக் கொலைகளுக்கு மன்னிப்பு கேட்காமல் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம் என்பது நம்பமுடியாதது மட்டுமல்ல அரசியல் அநாகரீகமும் கூட.
கொலைக்கான காரணங்களில் இயக்கங்கள் மக்கள் நலனிலிருந்தும், மக்களின் நிலைமைகளிலிருந்தும் தமது இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை மறந்து, புறசக்திகளின் நடவடிக்கைகளுக்கு மட்டும் ஈடுகொடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவே இக்கொலைகள் நடந்தேறியிருந்தன என்று நான் அறிந்துள்ளேன்.
இதுபோன்ற கொலைகள் யாவும் எமது போராட்டத்தில் போராட்டத்தை கொலைக் களமாகவும், போராட்டத்தை சுத்த இராணுவ நடத்தையாகவும், போராட்டத்தை இன்னோர் சக்தியின் குறிப்பாக இந்தியாவின் துணையுடன் மட்டும் நடத்திடலாம் என்ற தவறான போராட்ட அணுகுமுறையின் விளைவுகளேயாகும்.
இப்படியான அறம் மறந்த எமது போராட்டத்தின் விளைவுகளையே நாம் இன்று அறுவடை செய்திருக்கின்றோம்.
தமிழர்களின் மதிப்பிற்குரிய தலைவர்களில் முக்கியமானவர்களில் திரு தர்மலிங்கம் ஒருவர் மட்டுமல்லாது தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கு புதிய போக்கினை கொடுத்தவர்.
இவர்போன்ற தலைவர்களை பயங்கரவாதிகளாக தமிழீழ விடுதலை இயக்கம் இவர்களது உயிரை காவு கொண்டமைக்கு மன்னிப்பு கோருகின்றேன்.
திரு தர்மலிங்கம், திரு ஆலாலசுந்தரம் போன்ற தலைவர்களின் கொலைக்குப் பொறுப்பாக இருந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் மன்னிப்பு கோருகின்றேன்.
தமிழீழ விடுதலை இயக்கம் அரசியல் கட்சியாக இயங்க ஆரம்பித்த பின்பும் அரசியல் நாகரீகத்தை அங்கீகரிக்காது,ரெலோவினால் போராட்ட காலங்களில் நடைபெற்ற தவறுகளுக்கு மன்னிப்பு கோர தவறியும் இயக்கத்தில் இணைந்து இயங்கிய என் போன்ற தோழர்களின் மக்கள் அரசியல் இயங்கு பண்புகளுக்கு எதிராகவுமே எண்ணக் கருவைக் கொண்டிருக்கும் கேவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அரசியல் கட்சிக்குரிய பொது பண்புகளை மதியாத நடத்தைகள் காரணமாகவும் அக்காலங்களில் இயக்கத்தில் இயங்கிய நாம் இந்த பொது மன்னிப்பு கோரலை முன்வைத்து நிற்கிறோம்.
நாம் மனித நேய பண்புகளுடன் மக்களையும் தோழமை அமைப்புக்களையும் ஆராதிக்கின்றோம்.
அன்று நடைபெற்ற தவறுகளுக்கும், இன்று உதாசீனம் செய்யப்படும் பண்புகளுக்கும் மக்களே விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.
நாம் மக்கள் அரசியல் இயங்குபவர்களை நோக்கிய விமர்சன கலாச்சாரத்தை ஊக்குவிப்பு மட்டுமே இந்த மன்னிப்பு கோருவதன் மூலம் செய்ய முடியுயம்.
(இது ஏற்கனவே என்னால் sri saba foundation அமைப்பு மூலம் எழுதப்பட்ட கோரலை திருத்தி எழுதி வெளியிடுகிறேன். த சோதிலிங்கம்.
Sri Saba foundation, 2st, spt.2002)
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
08/02/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(இலங்கை, UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

Saturday 9 February 2019

கடிதம் 28 - ரெலோவினால் கொல்லப்பட்ட கிழக்கு மாகாணதமிழ் இளைஞர்கள்.

கடிதம் 28 - ரெலோவினால் கொல்லப்பட்ட கிழக்கு மாகாணதமிழ் இளைஞர்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்திற்க்கு கடிதம்.

"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 05/02/2019, (கடிதம் 28, மாதம்02, கிழமை 01)

தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

======================

ரெலோவினால் கொல்லப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள்
===================

கடந்த பலகாலங்களாக புலிகளின் கொலைகள் பற்றி அதிக கவனம் எடுத்து விமர்சனங்களை ரெலோ லண்டன் முன்வைத்திருந்தது, அது மட்டுமல்ல ரெலோ லண்டன் இதர தமிழ் போராட்ட அமைப்புக்கள் , அரசியல் இயக்கங்களுடன் இணைந்தும் புலிகளின் மற்றும் இயக்கங்களின் மனித உரிமை மீறல்களை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டும், பொது வெளியில் பொது பேச்சுக்களையும் செய்திரு்தோம்.
அது மட்டுமல்ல புலிகளினால் கொல்லப்பட்ட ரெலோ தோழர்களை நினைவு கூர்வதிலும் ரெலோ லண்டன் மிகவும் ஆழமாக கருத்துக்களை பகிர்ந்திருந்தது, எனினும் தமிழீழ விடுதலை இயக்கம் சுயமாக தனது தவறுகளை, பிழைகளை வெளிப்படையாக மக்களுக்கு முன்வைக்க தவறியுள்ளதை எடுத்துரைத்து மிகவும் பிரமல்யமாக மக்களால் நினைவு கூரப்படும் , அதிகமாக கருத்து பகிரப்பட்ட மற்றும் ஐநா வுக்கு தமிழ் மக்களால் எடுத்துச் செல்லப்பட்ட ரெலோவினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை இக்கடிதம் நினைவு படுத்த விரும்புகின்றது.
ரெலோ பற்றிய கொலைகள் என்று வரும் போது இக் கொலைகளுடன் பல முன்னாள் உறுப்பினர்களையும் இணைத்தே பேசப்படுகின்றது, தமிழீழ விடுதலை இயக்கம் தனது பொறுப்பு கூறலை தனது மனித உரிமை தாற்பரியத்துடன் தமிழ் அரசியல் கட்சி செய்ய வேண்டும் எனகேட்டுக் கொள்கின்றது.
கீழே தரப்பட்ட கொல்லப்பட்ட கிழக்கு மாகாண தமிழர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ் மக்களால் ஐநாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியல் என்பதை நினைவில் கொள்ளவும்.
புலிகளின் மனித உரிமைகளை கேட்பது போன்று ரெலோவின் மனித உரிமை மீறல்களுக்கும் ரெலோ பொறுப்புள்ள மக்களின் பிரதிநிதியாக பதில் சொல்ல வேண்டும்.

 TELO வினால் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் 

பெயர் விபரம்.

1. லிங்கன் நல்லதம்பி :கறுவாக்கேனி.வாழைச்சேனை 1988.4.2
2. கலா பொன்னம்பலம் சதானந்தரத்தினம். ஆரையம்பதி.1988.4.19
3. குருசாமி.கா.இரத்தினசிங்கம். களுதாவளை. 1988.8.14
4. வினோபா> கா.ஜெகதீஸ்வரன்.களுவாஞ்சிகுடி. 1988.8.14
5. அருணா>தியாகராசா சதீஸ்வரன்.ஆரயம்பதி>1988.9.13
6. சின்னத்தம்பி.சதாசிவம் சகாராச .தாழங்குடா.1988.10.22
7. தாயாளன்.கணபதிப்பிள்ளை கோபாலரெத்தினம்> துறைநீலாவணை.1989.7.16
8. சீராகரன் நீலாவணை 1989.7.16
9. முகிலன்.இராசமாணிக்கம் ஜீவராசா. கோட்டைகல்லாறு>1989.11.5
10. அரசன்>தங்கராசா கிருஸ்ணபிள்ளை>கரைதீவு>1988.4.19
11. ஜெயம்.கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம். வீரமுனை.1989.8.30
12. குரூஸ்.நல்லதம்பி பாக்கியராசா>காரைதீவு.>19891.9
13. றமணன்>கணபதிப்பிள்ளை இலட்சுமணன்.பொத்துவில்.1988.3.17
14. நிதி>செல்வநாயகம் கருணாநிதி.தம்பிலுவில்லு>1988.3.19
15. அரசன்>தங்கராசா கிருஸ்ணபிள்ளை>காரைதீவு>1988.4.19
16. இராசாத்>காரைதீவு.1988.5.17
17. றொசான்உலகசேகரன் பத்மநாதன்.சல்லித்தீவு.1988.5.27
18. நேசன்.காரைதீவு.1988.5.27
19. தீபன்.சிக்கநாதன் சின்னவத்தை.1988.6.1
20. சுந்தர்>சின்னத்தம்பி சிவானந்தசிங்கம்>காரைதீவு.1988.6.19
21. தாடி>பொன்னபம்பலம் நாதன்.காரைதீவு>1988.10.27
22. குமார்.முருகேசு உதயகுமார்>அக்கரைபற்று>1988.10.27
23. சுதா>கனசூரியர் திருச்செல்வம்.கல்முனை.1988.10.27
24. அகஸ்ரின்>சம்சுதீன் அபுல்கசன்.அக்கரைப்பற்று>198810.27
25. சத்தீயன் >ஞானமுத்து சிவானந்தராசா>திருக்கோவில்.1989.3.22
26. நளின்.பிரதாப்குமார் அஜித்குமார்.பொத்துவில்.1989.8.21
27. அலன்.சின்னத்தம்பி செல்லத்துரை.நற்பட்டிமுனை.1989.8.21
28. ஜெயம் கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம். சம்மாந்துரை.1969.8.30
29.குரூஸ் நல்லதம்பி பாக்கியராசா காரைதீவு 1989.9.11
30. தேவா சாமித்தம்பி கிருஷ்ணமூர்த்தி.>பாண்டிருப்பு.1989.9.19
31. யோகன்.வடிவேல் வேல்ராஜன்.திருக்கோவில்.1989.11.5
32. க.பாபு அக்கரைபற்று. 1989.11.12.
33. குமாராசாமி கிருபாகரன்.செட்டிபாளையம்.
34. கந்தையா வாலு. செட்டிபாளையம்.1990
35. குமாரசுவாமி கோபாலப்பிள்ளை. செட்டிபாளையம்.1990.9.15
36. தருமலிங்க.மாங்காடு 1989
37. அமிர்தலிங்கம் 1989
38. பெரியப்பா. செட்டிபாளையம்.1990.9.15
39. க.மனோகரன்.செட்டிபாளையம்.1989

எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(இலங்கை.,UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

Thursday 31 January 2019

கடிதம் 27 - செல்வத்தின் தலைமைக்கு ஆபத்து - உல்டா.

கடிதம் 27 - செல்வத்தின் தலைமைக்கு ஆபத்து - உல்டா.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 31/01/2019, (கடிதம் 27, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
======================
செல்வத்தின் தலைமை சாதித்தது என்ன?
===================
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு செய்த தொலைபேசி உரையாடலையும் கேட்டிருந்தேன் இதே உரையாடல்கள் போன்று பல புலம்பெயர் ரெலோ தோழர்களிடம் தினம் தினம் சந்திக்கும் போது கேட்கும் பேச்சுக்கள் "செல்வம் என்னவாம் என்ன செய்கிறார் உவங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியாது தங்கட குடும்பங்களுக்கு உழைக்கிறாங்கள் மக்கள் பற்றி அக்கறையில்லை" என்பதே !!!!
இரு நாட்களுக்கு முன்பு கனடாவிலிருந்து ரெலோ இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய முன்னின்ற செட்டியும், பிரான்சு நித்தியண்ணரும் தொலைபேசியில் ரெலோ பற்றிய அதிருப்தியில் பேசியிருக்கிறார்கள் ஒரு பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டு நின்றவர் இதை செல்வத்துக்கு சொல்ல,
செல்வம் பதறிப் போனாராம் தனக்கு எதிரா ரெலோவுக்குள் சதி என லண்டன் கனடா என தொல்லைபேசி அழைப்புக்களாம்.
இதில் முதலாவது விடயம் எனக்கு ஞாபகம் வந்தது என்னவென்றால் 1984 ம் ஆண்டு சிறீசபாவை கடத்தி கொலைசெய்ய அல்லது அடக்கி வைக்க என சுதன்-ரமேசு செல்வம் உட்பட பிரபாகரனிடம் துப்பாக்கியும் நஞ்சுப் போத்திலும் வாங்கியதை விடவா பெரிய விடயம் நடந்துள்ளது, இதை பிரபாகரன் சிறியை தன்னிடம் தரும் கேட்டது எமக்கு இன்றும் நேற்றுப்போல் உள்ளது. அதில் செல்வமும் உடந்தையே.
ஒவ்வொரு நாளும் செல்வத்தை திட்டும் பலர்.
கிழக்கில் எத்தனை அட்டூழியங்ஙள் நடக்கின்றது இவற்றுக்கு ரெலோ போராட்ட இயக்கமாக என்ன நடவடிக்கை எடுக்கின்றது ? ஏன் இவை பற்றி பேசுவதில்லை இதன் பின்னணியில் ரெலோவும் லஞ்சம் வாங்கிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறதா ? அல்லது துணிவில்லாத ரெலோவா?
செல்வம் தனது சுய நல சிந்தனையை வீட்டு "மக்கள் நல" சிந்தனைக்கு வர வேண்டும் துணிந்து முடிவு எடுக்க முடியாது பயப்பிட்டால் முணிவு எடுக்க கூடியவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
இக்கருத்தை எழுதியவுடன் ஒ, ஓஓ, இவரும் அந்த குழுதான் என்ற சிறுபிள்ளைகள் அழுவது போல் அழ வேண்டாம், நிதானமாக கடந்ததிலிருந்து இனி வரும் காலம் பற்றி யோசியுங்கள்.
நீங்கள் இயக்கத்துக்கு வந்தது பாராளுமன்றத்துக்கு போக அல்ல மக்களை இன அழிவிலிருந்து பாது காக்கவே உங்கள் முன்னால் தமிழ் பெண்கள் இசுலாமிய பயங்கரவாதிகளால் மானபங்கப் படுத்தப்படுகிறார்கள் இதற்கான சட்ட நடவடிக்கைக்கு ரெலோ முன்னிற்க வேண்டாமா ?
புலிகளின் பின்னர் 10 வருடங்கள் செல்வம் தலைமை வகித்து சாதித்தது என்ன வென்றால் அடுத்த தேர்தலில் " ரனில் ரெலோவுக்கு ஒரு பா உ ஆசனம் என்றாலும் தருவார் " அதை செல்வம் எடுப்பதே, சிலவேளை ஒரு அமைச்சு பதவி எடுக்கலாம் என்ற யோசனையை வளர்த்தது மட்டுமே.
ஏன் செல்வம் தலைமை பதிவியை ஒரு கிழக்கு மாகாணத்தவனுக்கு கொடுத்து மத்திய கமிட்டியில் இருந்து ஆலோசனை வழங்குபவராக இருக்க கூடாது.
செல்வம் என்ன சாகும் வரை ரெலோ தலைவரா ?
ரெலோ மிதவாத கட்சிகள் போன்று 97 வயது வந்து அறளை பேந்தாலும் தலைவர் என்பது மாகாதவறு, புதிய சந்ததியிடம், இதர உறுப்பினர்களையும் அவர்களது சிந்தனையிலுப் இயங்க இடம் கொடுக்க வேண்டும். இதை நான் ஐேர்மன் சந்திப்பில் கூறிய போது ஏற்றுக்கொண்ட செல்வம் இதை இப்போ செய்ய வேண்டும். (இனிமேல் செல்வம் என்னை சந்திப்பீர்களா அந்த ஆழுமை துணிவு இருக்கிறதா என பார்க்கின்றேன்)
ரெலோ உங்கள் வீட்டு சொத்து என்ற நினைப்பை மாற்றுங்கள் ஐனாவை, கென்றியை தலைவராக்குங்கள் அவர்கள் கிழக்கு மாகாண நிலைமைகளுக்கு கிழக்கு மக்களுடன் இணைந்து இயங்க ஒத்துழையுங்கள், இதுவே இன்றய தேவையாகும்.
அல்லது ரெலோ பாராளுமன்ற அரசியலுக்கு சமாந்தரமாக போராட்ட இயக்கத்தை வலுப்படுத்துங்கள்.

எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

Monday 28 January 2019

கடிதம் 26 - புலம்பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறுப்புக்கள்.

கடிதம் 26 - புலம்பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறுப்புக்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 30/01/2019, (கடிதம் 2, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
======================
புலம் பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறூப்புக்கள்.
===================
கடிதம் 26 - புலம்பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறுப்புக்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 30/01/2019, (கடிதம் 2, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
=====================================
புலம் பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறூப்புக்கள்.
===================================
தமிழீழ விடுதலை இயக்கத்துடன் தொடர்புடன் இருந்த உறுப்பினர்கள், போராளிகள், இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், இந்திய பயிற்சி பெற்றவர்கள் பிரச்சாரப்பிரிவில் ஈடுபட்டவர்கள் என சராசரியாக 400 பேர்களும் ரெலோவின் ஆதரவாளர்கள் என மேலும் 200-500 பேர்கள் வரையிலும் புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழ்கின்றார்கள் இவர்களில் அநேகமானவர்கள் ரெலோ பற்றிய மனநிலையுடனேயே வாழ்கின்றார்கள், அநேகமானோர் ரெலோவுக்காக உதவி செய்யும் மனநிலையிலும் இருக்கிறார்கள், கணிசமான தொகையினர் தொழில்துறையில் மேம்பட்டவர்களாவார்கள்.
ஆனால்
ரெலோவிலிருந்து யாரும் இவர்களை அணுகுவதில்லை, பொருட்படுத்துவதில்லை.
அவர்களின் பெறுமதியை உணர்வதில்லை அல்லது உணரத்தெரியாது, இது போன்றே இலங்கையிலும் ரெலோ தோழர்களையும் ஆதரவாளர்களையும் ரெலோ திரும்பியும் பார்ப்பதில்லை.
புலம்பெயர் நாடுகளில் ரெலோ இயங்குபவர்கள் ரெலோ ஆதரவாளர்களுடன் இயங்காமைக்கான காரணங்கள் சில உண்டு.
1) புலம்பெயர் ரெலோ அமைப்பு உறுப்பினர்களில் பலர் ஐரோப்பாவில் இருக்கின்ற போதிலும் இலங்கையில் ரெலோ எப்படி 1988-90 களில் இயங்கியதோ அதே எண்ணங்களுடனேயே இயங்கின்றார்கள்.
2) புலம்பெயர் நாடுகளில் ரெலோ ஆதரவுத் தமிழர்களை அடையாளம் காணத் தவறிவிட்டனர் இப்போது எப்படி என்று முழிக்கின்றனர்.
3) புலம் பெயர்நாடுகளில் ரெலோ என கெத்துடன் நாட்டாண்மை காட்டித்திரிபவர்களில் பலர் தமது இயக்க காலத்தில் செய்த பயங்கரவாத செயல்கள் வெளிவந்து விடுமோ என்ற பய உணர்வு காரணமாக புலம்பெயர் தமிழர்களிடம் போவதில்லை.
4) கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ரெலோவில் இன்று வரையில் முன்னால் ரெலோ தவிர வேறுயாரையும் இணைக்க முடியவில்லை.
5) முன்னணியில் இருப்பவர்களுக்கு அமைப்பு அமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும், அமைப்புக்கும் அதன் உறுப்பினர்க்குமான உறவு நிலை பற்றிய புரிதல் இல்லாதவர்கள் - இன்றும் அன்றய இயக்க இராணுவ இயக்க இயங்கு நிலை போன்றே சிந்திக்கின்றார்கள்.
6)சிலர் சமூகத்தில் மற்ற மனிதர்களுடன் பேச, பழக வேண்டும் என்ற சமூக அறிவு வளர முன்பே இயக்கங்களுடன் இணைந்தவர்கள் சமூக இயக்கம் பற்றிய அறிவில் தாழ்ந்து இருக்கிறார்கள், இதற்க்கு நல்ல உதாரணம் லண்டன் பொறுப்பாளர் இவர் இதர ரெலோ உறுப்பினர்களுடன் பேசும் முறை பற்றி ரெலோ தோழர்களே நல தடவைகள் கருத்து பரிமாறியுள்ளனர்.
7)குறிப்பாக லண்டனில் இயங்கும் ரெலோ உறுப்பினர்களில் சிலரும் பொறுப்பாளரும் தமது லண்டன் கெத்தை தமக்கு காட்டுவதாக இலங்கை ரெலோ, கனடா ரெலோ, சூவிசு ரெலோ, இலங்கையில் ரெலோ மத்திய கமிட்டி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
8)லண்டன் ரெலோ பொறுப்பாளரே புலம் பெயர் ரெலோ ஐக்கியத்தை குலைத்தவன் என்றும் இது தோழர்களுடன் பேச பறையத் தெரியாமலே இவனது மொக்குத்தனத்தால் இந்த நிலை புலம்பெயர் ரெலோவுக்கு வந்தது என பலர் கூறியுள்ளனர்.
9)பலர் பேச்சுக்களை பதிவு செய்து பரிமாறியுள்ளார்கள்.
10)யுகே ரெலோவில் எனது அனுபவம் தனியான கடிதமாக வெளிவரும்.
11)ஒவ்வொரு நாடுகளிலும் இரண்டு, மூன்று குறுப்புக்கள், குறுப்புக்குள்ளே இருந்து கொண்டு குறுப்போட்டு பேசுவது.
12)அமைப்பை எப்படி உருவாக்குவது பராமரிப்பது, இயக்குவது பற்றிய அறிவற்றவர்கள், கடந்த பல வருடங்களாக தமது இயக்க முறைகளின் தவறுகளை புரியாதவர்கள்.
அதேபோல மற்றய நாடுகளில் உள்ளவர்கள் ரெலோ அமைப்புக்குள்ளேயே சாதாரண நடைமுறைப் பிரச்சனையை பகை முரண்பாடாக்குபவர்களாக இருக்கிறார்கள்.
13)முரண்பாட்டை தீர்க தெரியாது ஊதி பெருப்பிக்கும், தமது சுய இன்பத்துக்காக முரண்பாடுகளை வளர்க்கும் அமைப்பாகவே இயங்குவதை நான் அவதானிக்கிறேன்.
14)படம்பிடித்து முகநூலில் போட்டால் சரி இயக்கம் இயங்குகின்றது என்ற திருப்தியடைபவர்கள்.
15)இலங்கையில் ஊருக்கு சேவை செய்த பலபல ஊர்ச்சங்கங்கள் செய்த உதவியில் ஒரு சிறுபகுதி கூட ரெலோ புலம் பெயர் உறுப்பினர்களால் செய்ய முடிய வில்லை.
16)எதுவும் செய்யாத கூட்டங்கள் தனிமனித விருப்புக்கு முதலிடம் கொடுப்பது முன்னேறும் பக்குவமல்ல.
18)பொதுஇயக்க முறைக்கும் தனிப்பட்ட நடத்தைக்கும் வேறுபாடு புரியாதவர்கள்.
ரெலோ புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு ரீ-வடை குறுப் மட்டும் தான் எதையும் சாதித்துவிடப் போவதில்லை, யாரும் விசேடமாக இயங்கினால் மட்டும்.
(சுவிசில் இயங்கும் சேகர் தலைமையில் இயங்கும்
" நமக்காக நாம் " (Telo Sarvathesam என்ற ரெலோ ரெலோ அமைப்பு இந்த மேற்குறித்த விமர்சனங்களுக்குள் அடங்காது)
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

Friday 25 January 2019

கடிதம் 25 - தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் உரிமம் யாருக்கெல்லாம்.

கடிதம் 25 - தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் உரிமம் யாருக்கெல்லாம்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 30/01/2019, (கடிதம் 25, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
=================
தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் யாருக்கு சொந்தம்.
=============

தமிழீழ விடுதலை இயக்கம் தங்கத்துரை காலம் தொடக்கம் இயங்கிக் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் உரிமையுள்ள பெயராகும்.
இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சி இயங்குவதாயின் அக்கட்சிக்காக தம்உயிரை அர்ப்பணித்த தங்கத்துரை தொடக்கம் பின்னால் வந்த இயக்க தோழர்கள் வரையில் செய்யப்பட்ட அர்ப்பணிப்புக்களாலேயே என்பதை ரெலோ தோழர்களுக்கு செல்வம் புரிய வைக்க வேண்டியது கடமையாகும்.
ஏனெனில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் என தலைவர் செல்வத்தால் அடையாளப்படுத்தப்பட்டு இயங்குவதாக கூறும் பலருக்கு இதன் தாற்பரியம் புரியவில்லை என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த வைபர் குறுப் செய்தி வெளிப்படுத்தியது. (இந்த வைபர் குறுப் தலைவர் செல்வத்தின் ஆட்களாலேயே நடாத்தப்படுகிறது வேறுயாரும் என குற்றம் சாட்ட வேண்டாம்.
தமிழீழ விடுதலை இயக்கத்துக்காக இரவு பகலாக தமது பணங்கள் சொத்துக்களை கொடுத்து இயங்கிய பல தோழர்கள் இறுதியில் தம் உயிரையும் கொடுத்தனர், மேலும் சிலர் அரசியலிலிருந்து விலகி வாழ்கின்றனர், இவர்களின் அர்ப்பணிப்பினாலும் இன்று இந்த பெயரை தாங்கள் வைத்து கட்சியை நடாத்துகின்றீர்கள் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
இதைவிட இரவு பகலாக உழைத்த பல தோழர்கள் நீங்கள் ரெலோ கட்சியை எப்படி நடாத்துகின்றீர்கள் என்பதை அவதானித்துக் கொண்டு வாழ்கின்றார்கள் அவர்களில் பலர் இன்று ரெலோ வின் இயங்கு முறை பற்றி பல முரணான கருத்துக்களுடன் இருக்கிறார்கள்.
ரெலோ நாட்டில் இயங்கிய காலத்தில் ரெலோவுக்காக உழைத்த பல பல பொது மக்கள் இன்றும் ரெலோ பற்றிய அவதானத்துடன் ரெலோ தம்முடன் ஒரு வார்த்தை பேச வில்லை என்ற கோபத்துடன் வாழ்கின்றார்கள்,
இவர்களைவிட இலங்கை சிறைச்சாலைகளில் இருந்த தோழர்களில் அளவில் அதிகமானோர் ரெலோ உறுப்பினராகவே 1988வரையில் இருந்து சிறையனுபவித்தனர்.
இதைவிட புலிகளால் ரெலோ தாக்கப்பட்டபோது பாதுகாத்த பல பல மக்கள் குறிப்பாக பெண்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றையும் விட ரெலோவுக்காக தம்மை அர்ப்பணித்து தமது அங்கங்களை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர்.
புலிகளை எதிர்த்து இலங்கையில் ரெலோ இயக்கத்தை மீள கொண்டு வந்து இறக்கி புலிகளுடன் போராடி ரெலோ பெயரை காப்பாற்றியவர்கள் என பலதரப்பட்ட தமிழர்கள் தோழர்களின் இயக்கத்தாாலேயே பெயர் காப்பாற்றப்பட்டது என்பதை இன்று ரெலோ என்று இயங்குபவர்கள் நினைப்பதில்லை, ரெலோ தலைவர் செல்வம் உட்பட என்பது வேதனைக்குரியதாகும்.
சில முக்கிய உறுப்பினர்கள் ஏன் தாம் ரெலோவிலிருந்து தூர நிற்கிறோம் என்பது வேதனையான கதைகள் australia விலிருந்து லண்டன் வரை உள்ளன.
மேற்குறிப்பிட்ட இத்தனை தரப்பினர்க்கும் ரெலோ உரிமையுள்ளதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
இந்த மக்கள், உறுப்பினர்களைப் பற்றி எந்த அக்கறையுமற்று விடுதலைப் போராட்ட அமைப்பு, தலைமை இருக்க முடியுமா?
இந்த பெருமக்களுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்குமான உறவு ,தொடர்பு என்பது என்ன? ஏன் இவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் இணைந்திருந்தனர் அதற்கான சமூகத்தேவை என்ன?
விடுதலை இயக்கம் இது பற்றி என்ன கருத்துடன் இயங்குகின்றது ?
இவர்கள் உங்களுக்கு வாக்குகளை போட்டு உங்களை மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்துக்கும் மாகாண சபைக்கும் அனுப்பினால் சரியா? அதுவா மக்கள் இயக்கத்தின் இயங்கு முறை ?
தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரை அவ்வியக்கத்தை கட்டியெழுப்பியவர்கள் பாவிக்க உரிமை இல்லை என்றால் உங்கள் தேர்தல் கட்சிக்கு வேறு பெயரை வைக்க வேண்டுமே தவிர இயக்கத்தை கட்டியவர்களை தடுக்க வேண்டாம் என கேட்டு பதிவை முன்வைக்கிறேன்.
இன்றய பல ரெலோ உறுப்பினர்கள் இந்த விடயங்களில் எந்த வித சிந்தனையும் அற்று நேற்று தாம் பதிவு செய்த கட்சி போல் தம்மில் சிலர் ஒன்று கூடினால் அது கட்சியின் விடயம் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இங்கு குறிப்பிட்ட விடயத்தில் அக்கறை எடுத்து ரெலோ உறுப்பினர்களை குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களை அறிவூட்டல் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தற்போதய ரெலோ கட்சியின் இயங்கு முறையானது மக்களுடன் தொடர்புபட்டதாக இல்லை என்பது வெளிப்படை !!!
எம்முடன் வாழ்ந்த இந்த தோழர்களுக்கான எனது/எமது குரல் தொடர்ந்து இருக்கும்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

Thursday 24 January 2019

கடிதம் 24, புலிகளினால் கொல்ப்பட்ட ரெலோ தோழர்களுக்கு ரெலோ நினைவாலயம் ஒன்றை அமைக்குமா?

கடிதம் 24, புலிகளினால் கொல்ப்பட்ட ரெலோ தோழர்களுக்கு ரெலோ நினைவாலயம் ஒன்றை அமைக்குமா? 
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 29/01/2019, (கடிதம் 23, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
===========
புலிகளினால் கொல்ப்பட்ட ரெலோ தோழர்களுக்கு ரெலோ நினைவாலயம் ஒன்றை அமைக்குமா? எமது காரைநகர் மக்களின் சார்பாக கேட்கின்றேன் .
===========
புலிகளினால் கொல்ப்பட்ட ரெலோ தோழர்களுக்கு ரெலோ நினைவாலயம் ஒன்றை அமைக்குமா? அதற்காக செயலாற்றுமா? துணிவு இருக்கின்றதா?
காரைநகர் மக்கள் சார்பாகவும் கேட்கிறேன்.
நீங்கள் அரசுடன் உறவாடும் நிலையில் அதிக பணம் புழக்கம் கொண்டவர்கள் என்று பேச்சு அடுத் பாராளுமன்றில் செல்வத்துக்கு மந்திரி பதவி என்ற பேச்சு
தோழர்களை மரியாதை செலுத்துவீர்களா?
புலிகளினால் கொல்ப்பட்ட தோழர்களில் மிக அதிகமானோர் கரைநகரில் வைத்தே தகனம் செய்ப்பட்டது அதுவும் காரைநகர் மக்களால் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது புலிகளை தடுத்திநிறுத்திய எமது காரைநகர் மக்களின்சார்பாக கேட்கின்றேன் .

புலிகளிடமிருந்து ரெலோ தோழர்களை காப்பாற்றிய காரைநகர் மக்கள் எனது மக்கள்எனது உறவுகள்சார்பாக கேட்கிறேன்.

இன்று பா.உறுப்பினர்கள் அரசில் இணக்க அரசியல் பிரமத மந்திரின் கையாட்கள்என்றெல்லாம் கூறப்படும் நிலையிலும் உங்களில் பலர் சொந்தமாக சொத்து திரட்டும் பணியில் மிக மும்மரமாக இருப்பதையேநாம் பாரத்து கேட்கின்றேன் இந்த தோழர்களையும் நினைத்துக் கொள்ளுங்கள்.
மக்கள் இந்த தோழர்களைமறக்காது இதற்கான வேலைகளழ நீங்கள்அரசில் உறவில் இருக்கும் இக்காலத்தில் செய்வதே சிறந்தாகும்.
நீங்கள்பலம் இழந்த காலத்தில் இவற்றை வைத்து அரசியல் செய்யாமல் இன்றே இந்த நினைவாலயத்தை அமைத்திடுங்கள்.
சரியான இடம் காரைநகர் வலந்தலை சந்தி இந்த இடத்திலேயே ரெலோ தோழர்களின்உடலங்களைகாரைநகர் மக்கள் புலிகளிடமிருந்து பெற்று தகனம் செய்தனர்.

கருத்துக்களை பகிர்ந்த காரைநகரை சேர்ந்த தம்பி தம்பிராசா மற்றும் தேவன் முன்னால் ரெலோ உறுப்பினர்களுக்கும் நன்றி.
எம்முடன் வாழ்ந்த இந்த தோழர்களுக்கான எனது குரல் தொடர்ந்து இருக்கும்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
28/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 23 -தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்.

கடிதம் 23, தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்த

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 28/01/2019, (கடிதம் 23, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
=======================================
தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்.
=================================================

புலிகளால் கொல்லப்பட்ட பல தோழர்களின் குடும்பங்கள் இன்றும் சீரழிந்த நிலையிலேயே வாழ்கின்றனர் அவர்களது குடும்பங்களை அவர்களது வாழ்வு நிலை பற்றி தமிழீழ விடுதலை இயக்கம் அக்கறையற்து இருப்பது வேதனையான விடயமாகும்.

இன்று நீங்கள் அரசின் எடுபிடிகள் இலங்கை அரசுடன்டஇணக்க அரசியல் செய்கின்றீர்கள் என்றால் இயக்கத்துக்கதாக தம்மை அர்ப்பணித்த தோழர்களினால் தான்என்பதை மறந்திருக்கினறுpர்கள் என்பத எனது குற்றச்சாட்டாகும்.

அண்மையில் ரெலோ தனது அரசியல் வெற்றிகளை பெற்று பிரதேசசபைகளில் பலரை பெற்றுள்ளபோதிலும் இந்த தோழர்களின் குடும் பங்கள்பற்றிய தகவலர்களைதிரட்ட தவறி அவர்களைப்பற்றி அக்கறையற்றதன்மைனை வெளிப்படுத்தி உங்கள்சுயநலங்களில் மட்டும் அக்கறை காட்டுவதை அவதானிக்கின்றோம் இது விடுதலை இயக்கம் என்ற பெயரின் இலக்கணத்துக்கு இழுக்கும் போராடிய தோழர்களை மறந்தது அறம் தவறியதேயாகும்.
புலிகளின்னால் கொல்லப்பட்ட பல தோழர்களின் உறவுகள் இன்றும் தமிழீழ விடுதலை இயக்கம் தம்மை ஒரு சொல் கேட்கவில்லை என்ற ஆதங்கத்துடனேயே வாழ்கின்றார்கள்.

இவர்களை தமிழீழ விடுதலை இயக்கம் அக்கறையுடன் மரியாதையாவது செய்யுமா? அவர்கிள்மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உதவி செய்யுமா?
வட்டுக்கொட்டையில் புலிகளால் கொல்ப்பட்ட சங்கர்லால் அவர்களின் அப்பா சுகவீனமுற்று இருப்பதும் குடும்மபம் தமது கையேறு நிலையில் இருப்பதையும் முகநுhல்களில் பதிவுகள் வெளிவந்திருந்தது. இதன் பிறகும் கூட ரெலோ இந்த குடும்பங்களை அக்கறையற்று விட்டடிருப்பது போராடிய இனம் என்று கூறமுடியுமா ? அல்லது ரெலோ போராடிய இயக்கமா?

குறைந்த பட்சம் இந்த தோழர்களின் உறுவுககளுக்கு மரியாதையாவது செலுத்துங்கள்.
இந்த உறவுகள் இறந்த பின்னர் அவர்களது உடலுக்கு மரியாதை செலுத்துவதை விட வாழும் போதே அவர்களிடம் பேசுங்கள் அத்துடன் அவர்கள் வாழும் போதே அவர்களது பிள்ளைகளின் அர்ப்பணிப்பை அர்தத முள்ளதாகக்குங்கள்.

அவர்கள் தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்.

எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
28/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

Saturday 19 January 2019

கடிதம் 22, தலைவர் சிறீசபாவை கொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கம்.

கடிதம் 22, தலைவர் சிறீசபாவை கொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கம்.
 தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 28/01/2019, (கடிதம் 24, மாதம்01, கிழமை 04)

தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,

தலைவர் சிறீசபாவை கொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கம்.
==================
ரெலோ தோழர்கள் கொல்லப்பட்ட பின்னர் ரெலோ ஒளித்தும், ரெலோவில் சிலர் புலிகளின் சீலைக்குள் படுத்திருந்த போதும் ரெலோ லண்டன் லண்டனில் புலிகள் இருக்கும் போதே நினைவு தினங்களை அனுட்டித்தோம். 


ரெலோ தோழர்களில் பலரும், லண்டனில் புலிகளின் வால்-காவாலிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் ரிபிசியில் செய்திருந்தோம் இன்றும் நாம் ரெலோ லண்டனே அவர்கள் மீது அக்கறையுடையவர்களாக உள்ளோம், கஞ்ச-லஞ்ச ஊழல் பதவி ஆசைக் கூட்டம் லண்டனில் ரீ-வடை குறுப்பை வைத்து தமது பதவிக்காக பேய்க்காட்டுகின்றது.

புலிகளின் அர்ப்பணிப்பு கொண்ட உறுப்பினர்கள் எமது எதிர் கருத்தை ஏற்றிருந்தனர் என்பது குறிக்கப்பட வேண்டும்.
லண்டனில் இயங்கும் இந்த ரீ-வடை குறுப் பிரித்தானிய சட்ட திட்டங்களுக்கு முரணாகவே இயங்கும், நிதிகையாளும் சாம் குறூப், இது போராடிய 1969 ஆண்டு ஆரம்பித்த தாய் விடுதலை இயக்கத்திக்குரிய எந்த குணாம்சத்தையும் கொண்டிராத கூட்டம், இது வரையில் முன்னால் ரெலோ உறுப்பினர்கள் தவிர மற்றவர்களை அணுகாத குறூப்.
ரெலோ சார்ந்த உறுப்பினர்களது செத்தவீடு,31ம் நாள் பூசைவீடு, தண்ணி அடாச்சு கூத்தாடுற birthday party, சாமத்தியச் சடங்குகள் இவைகளில் கலந்து கொண்டபின் கூடியிருந்து ரிவடை பேசும் அரசியல் குறுப், யார் நம்புவார்கள், மக்கள் அமைப்புக்கு ஒரு வரையறை உள்ளது தெரியாத மொக்கன்கள் கூட்டம்
இவை பற்றி எனது blog ல் கடிதங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.
21/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 21, தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

கடிதம் 21, தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே !!!--------தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 24/01/2019, (கடிதம் 22, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
===========
ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே !!!
===============
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஒரேஒரு தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே, இவர் முதலிசமூகத்தை சேர்ந்த உயர்சாதியினன் என்ற காரணமே கொல்லப்படக் காரணமாகியது, ரெலோ உள்ளேயும், புலிகளின் அனுசரணையுடன் வடமராட்சியை சேர்ந்த சிலரின் தூண்டுதலினாலும் இக் கொலை நடந்தேறியது.
1984 ம் ஆண்டு சுதன் -ரமேசு தலைமையில் ஒரு கொலைமுயற்சி முறியடிக்கப்பட்ட போதும் 1986 ம் ஆண்டு இவர்கள் எல்லோரும் சேர்ந்து புலிகளை பாவித்து கொலையை ஒப்பேற்றினார்கள்.

இதுவே தமிழர்களின் இன்றய இழிநிலைக்கு வழிவகுத்தது.
1982ம்ஆண்டுக்pகு பின்னர் ரெலோ இயக்கத்தை 1986 வரையில் அன்றய காலத்துடன் இணைத்து வளர்த்தெடுத்த பெருமை சிறீ சபாரதத்தினத்தின் தலைமையே இதனi ஏற்றக்க மறுத்தவர்கள் ரெலோவின்உள்ளேயும் வெளியேயும் இயங்கியரெலோ தலைவரை கொலை செய்தாவது ரெலோவிள் வளர்சியை தடுத்தனர்.
தமிழர்களின் உரிமைகள் இந்தியாவின் ்அனுசரணையின்றி பெயமுடியாது என்ற யதாரத்தத்தை முன்னெடுத்தவர் சிறீசபாரத்தினம் அவர்களாகும்.
இந்தியாவின் உதவியின்றி தமிழர் அரசியல் உரிமைகளை பெறமுடியாது என்பது தமிழ் தலைமைகளின் நீண்டகால பொது முடிவின் பின்னர் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டது, இந்தியாவின் தென்பகுதி பாதுகாப்பு நலனுக்குட்பட்டு தமிழரின் அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பது என்ற தமிழர்களின் எதிர்பார்ப்பை இந்திய இராணுவத்தின் வருகையுடன் ஒப்பேற்றியிருப்பதே !!!

சிறீசபா இல்லாத போதும் eprlf அதை முன்னெடுத்திருந்தது.
மீண்டும் இந்தியாவின் அனுசரணையின்றி இலங்கையில் தமிழர் அரசியல் உரிமைகளை பெறமுடியாது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதே தேவை, சிறீசபாரத்தினத்துக்கு முன்பும் பின்னரும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு தலைமைத்துவம் இருக்கவில்லை.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
21/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 20, நமக்காக நாம்-தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

கடிதம் 20, நமக்காக நாம்-தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 21/01/2019, (கடிதம் 21, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
====================
நமக்காக நாம்
===================
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மக்களுக்காக இயங்கும் தோழர்களில் யார் என்ற தேடலில் சுவிசில் சேகர் தலைமையில் இயங்கும் நமக்காக நாம் என்ற அமைப்பை இங்கு குறிப்பிட்டு குறிப்பிட்டு இக் கடிதத்ததை எழுதலாம் என்நினைக்கின்றேன்.
தலைவர் சிறீசபாரத்தினத்தை முன்னிறுத்தாத தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் மக்கள் ஒரு போராடட இயக்கமாக பார்க்கமாட்டார்கள் என்பதை கவனம் கொள்ள வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் பல ரெலோவின் கிளைகள் - பிரித்தானியா> சுவிஸ் பிரான்ஸ்> கனடா ஜேர்மன் ஆகியநாடுகளில் ரெலோ இயங்கின்றது என்பதை ஊடகங்களிலும் ரெலோவின் வைபர் குறூப்புக்களிலும் உல்லாச கதையளப்பில் பார்க்கின்றேன்.
ஒவ் நாடுகளிலும் அநேகமாக இரு அல்லது அதற்க்கும் மேற்ப்பட்ட பிரிவுகள் இயங்குகின்றன அவர்களுக்கிடையே சர்சரவுகளும் குழப்பங்களும் ஒருவரை யொருவர் கேலி பண்ணுவதும் குறைகூறுவதுமாக இவர்களது கதையளப்பு இருக்கின்றது இந்த கதையளப்பை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக காண்கின்றபோதிலும் இவர்களில் தமிழீழ விடுதலை இயக்கமாக இயங்கியவர்கள் ஒரு சிலரே ஏனையோருக்கு இயக்கம் அரசியல் மக்களுக்கான தொடர்புகளில் உள்ள குழப்பம் அறிவின்மை இவர்களை மிகவும் முரண்பட்டவர்களாக வைத்திருக்கின்றது, அல்லது பொருட்படுத்தாத இயக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒருசிலராவது மிகவும் தெளிவு கொண்டோராக இருப்பதும் உண்மையே> மேலும் சிலர் தமது அன்றயபுழுகு மூட்டைக்காகவே கூட்டங்கள் ஒன்று கூடல்களுக்கு வருகின்றார்கள் என அந்த கூட்டங்களில் இருக்கும் உறுப்பினர்களில் சிலரது கருத்தாகவும் இருக்கின்றது.
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் சுவிஸ்சில் இயங்கும் நமக்காக நாம் அமைப்பு இலங்கையில் பலவேறு உதவிகளை மக்களுக்கு நேரடியாக செய்து கொண்டிருக்கின்றது.
அது மட்டுமல்ல நமக்காக நாம் அமைப்பு முன்னாள் ரெலோவினர் மட்டுமல்ல இதர இயக்கங்களில் இருந்தவர்களையும் இணைத்து இலங்கையில் ரெலோவின் முன்னாள் உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்பட்ட ரெலோ தோழர்களின் பிள்ளைகள் என பல்வேறு வகையினரையும் இணைத்து இயங்குகின்றது.
இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் நமக்காக நாம் போராட்டத்தில் தொலைத்த சிறீசபாராத்தினத்தின் அடையாளத்தை தொடர்ந்து இலங்கையில் நிலை நிறுத்தும் அமைப்பாக இயங்குகின்றது, பலவேறு கிராமங்களில் சிறீசபாவை எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த பல வருடங்களாக நமக்காக நாம் அமைப்பினரது நடவடிக்கைகளை ரெலோ சர்வதேசம் அமைப்பு எனும் சமூக வலையில் வெளியிட்டிருந்தது,
அவர்களது ஒவ்வொரு மக்கள் தொடர்பிலும் தலைவர் சிறீசபாரத்தினம் அடையளத்துடன் தமது சேவைகளை செய்து வருக்கின்றார்கள் இந்த அமைப்புடன் கடந்த காலங்களில் புலிகளினால் கொல்லப்பட்ட தலைவர் சிறீசபாரத்தினம் ஒரு வரலாற்று தவறு என உணர்ந்த அல்லது நாம் தமிழர்கள் எம்மிடையே மோதி அழிந்து கொண்டோமே என உணர்ந்த இருதரப்பினரும் இணைந்து இந்த இயக்கத்தை நடாத்துவது நல்ல முன் உதாரணமாகும்.
அது போன்ற பல்வேறு தரப்பினரை இணைத்து அரசியலிலும் மக்கள் உதவித் திட்டங்களிலும் இயங்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் ஆனால் இலங்கையில் ரெலோ அல்லது இதர நாடுகளில் ரெலோ இது போன்ற முயற்ச்சிகளை முன்னெடுக் தெரியாது இருக்கின்றார்கள்.
புலம் பெயர்நாடுகளில் குறிப்பாக லண்டனில் வெறுமனே ரி-வடை கூட்டங்களை நடாத்தி விட்டு காலத்ததை வெற்றாக ஓட்டுகிறார்கள். புலம் பெயர்நாடுகளில் குறிப்பாக லண்டனில் ரெலோ இயங்கு முறையும் விசேடமாக லண்டன் ரெலோ இயங்கு முறையும் இவர்களது மனநோய்கள் பற்றியும்.தனித் தனி கடிதமாக வெளிவரும்.
ரெலோ சுவிஸ் கிளை அமைப்பின் நமக்காக நாம் அமைப்பினர் க டந்த காலங்களிலும் இனிவரும் காலங்களிலும் திட்டமிடப்பட்டுள்ள உதவி வழங்கல்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு சாவகச்சேரி .கல்லூரிகள் மன்னார் யாழ்ப்பாணம் பூநகரி கொக்குத் தொடுவாய் என பல இடங்களில் முன்னாள் ரெலோ போரிகளுடன் இணைந்து நிற்கின்றார்கள்.
இது போன்ற மக்களுக்குஉதவி செய்யும் அமைப்புக்களை இதர புலம்பெயர் நாட்டு கிளைகளும் செய்ய இயங்க முன்வர ரெலோவின் தலைமை ஆழுமையை செலுத்த வேண்டும்.
-------------------------------------
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
21/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 19, (1)தமிழீழ விடுதலை இயக்கமும் இலங்கையில் முன்னாள் போராளிகளும்.

கடிதம் 19, (1)தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 18/01/2019, (கடிதம் 19, மாதம் 01, கிழமை 03)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

தமிழீழ விடுதலை இயக்கமும் இலங்கையில் முன்னாள் போராளிகளும்.
===============

நான் இந்த தலைப்பை இடுவதற்கான காரணம் இலங்கையில் தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டி வளர்த்த தோழர்களின் கருத்துக்களிலிருந்தும், அவர்களின் இன்றய வறுமை நிலைமைகளிலிருந்துமேயாகும்.
எந்தவித உதவிகளும் இன்றி கடின உழைப்பிலும் போதாமையுடன் வாழ்வு வாழ்கின்றார்கள், தாம் இந்த கடின வாழ்வை புலிகளின் கொலைகளைத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருப்பதாயும், தமது சுய முயற்சியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை கெளரவத்துடன் கூறுகிறார்கள்.
"நாம் மிகவும் அதிகமாக இயக்கம் பற்றி சிந்தனையுடன் வாழ்ந்து விட்டோம் ", போராட்டம் தோற்றது ஒருபக்கம் மக்களின் இழப்புக்கு பின்னரும் ரெலோ தமது மக்கள் பற்றிய சிந்தனையற்றே இருக்கின்றது என்பதே அவர்களது கருத்தாகும், இயக்கம் என்பது, அரசியல் கட்சி என்பது இதுவா சீ , சீ ஒரு விடுதலைப் போராட்டவாதிகள் என்பதற்க்கு அவமானம்.
முன்னாள் போராளிகளில் பலர் இன்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றார்கள், பலரை ரெலோ முன்னணி உறுப்பினர்கள் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு போகிறார்கள்.
இவர்களை நம்பி இவர்களுடன் இயக்கத்தில் இருந்தோம் எம்மை இழந்தோம், என முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
இது ஏன் ?
இந்த முன்னாள் ரெலோ உறுப்பினர்களுடன் அமைதியாக, ஆறுதலாக பேச முடியாது என்றால் நீங்கள் எப்படி அப்பாவிகள், ஏதிலிகளாக உள்ளவர்கள், நலிந்த பொது மக்களுடன் பேசுவீர்கள்.
நீங்கள் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம், கட்சி நடத்துகின்றோம் என்று கூறுவதை நம்பமுடியுமா?
முகநுாலிலும் , தனிப்படவும் பல தோழர்கள் ரெலோ பற்றிய வெறுப்புடன் கொதிப்புடன் இருக்கிறார்கள், இவர்கள் யாபேரும் உங்களுக்கு பக்கத்திலேயே உங்கள் இலங்கை பிரசைகளாகவே, உங்களுக்கு வாக்களிப் பவர்களாகவே வாழ்கின்றார்கள்.
நீங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் கடந்த காலத்தில் ரெலோவில் இயங்கியவர்களின் பெயர் விபரம் இன்னும் தயாரிக்க வில்லை என்றால் எப்படி மக்களுக்காக இயங்குகின்றீர்கள் என நம்புவது ?
கடந்த பல பல வருடங்களில் உங்களால் செய்யப்பட்ட மக்களுக்கான தினக் குறிப்புக்களை வெளிப்படுது வீர்களா ?
கட்சி, இயக்கம் மக்களினது மக்களுக்கு உங்கள் கடமைகளை வெளிப்படையாக முன்வைப்பீர்களா ?
இயக்கம், கட்சி என்பது தொழில் அல்ல மக்களை ஒருங்கிணைத்து மக்களுடன் இணைந்து மக்களுக்காக இயங்குவதே ஆனால் இன்று ரெலோ ஒரு அரசியல் சந்தர்ப்பவாதிகளாக தேர்தலுக்காக மட்டும் சென்று வாக்கு கேட்டு விட்டு மக்களை மறக்கும் மிதவாதிகளாகவே இயங்குகின்றீர்கள்.
இச் செயலுக்காக இயக்கம் கட்டப்படவில்லையே! , இச்செயலுக்காக இயக்கத்துக்கு உறுப்பினர்கள் தம் உயிரை அர்ப்பணிக்க வில்லையே !
தமிழீழ விடுதலை இயக்கத்தை புலிகளிடமிருந்து பாதுகாத்த பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள், இயக்கத்துக்காக எமக்கு உதவிசெய்த பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு இவர்களது மரணத்துக்கு முன்பாவது ரெலோ தனது நன்றியை தெரிவிக்குமா ???
உதாரணத்துக்கு புலிகளால் வட்டுக்கோட்டையில் கொல்லப்பட்ட பல தோழர்களில் ஒருவர் சங்கர்லால் அவரது கொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பம் 1986 லிருந்து இன்றும் கடின வாழ்வில் இருக்கிறார்கள் சங்கர்லால் பெயரால் தம் கெளரவத்துக்கு இழுக்கு வராமலும் வாழ்கிறார்கள்,
இது அவர்களது நிலைப்பாடு நீங்கள் ரெலோ மக்களுக்காக இயங்குகிறோம் என்பவர்கள் இந்த தோழர்களின் குடும்பத்தை ஒரு கணம் சிந்திக்க வேண்டாமா ? சங்ஙர்லால் போன்ற போன்ற பல தோழர்கள் பயிற்சி முகாம்களில் "நாம் போராட்டத்தில் இறந்தால் எமது இயக்கம் எமது குடும்பத்தை பாதுகாக்கும் என்று கூறியது உங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா ???
இவன் போன்ற தோழர்களின் குடும்பங்களை, முன்னாள் போராளிகளை நீங்களாக போய் ஏன் பறையக் கூடாது? அவர்களது நலம் விசாரிக்க கூடாது? தேவைகளுக்கு உதவக் கூடாது?
தோழர் சங்கர்லால் இறுதியாக சந்தித்த போது தனக்கு மிகவும் பிடித்தமான சேட்டை எனக்கு தந்து வெளியிடங்களுக்கு போக அனுப்பிய ஞாபகத்தையும் இணைத்து பதிவிட விரும்புகிறேன்.
இயக்கத்தில், பயிற்சி முகாம்களில் இந்தியாவில் , சென்னையில், சேலத்தில், காஞ்சிபுரத்தில் ஒன்றாக வாழ்ந்த தோழர்களை இப்படி கைவிடலாமா???
திட்டமிடலில், வாழ்விலும், வெற்றியிலும், போராட்ட துன்பத்தில் பங்கு கொண்ட தோழர்களை மறப்பது மனிதாபமா???
மக்களுக்காக இயங்கும் நீங்கள் உங்களுடன் இணைந்திருந்தவர்களை கைவிட்டு, குடும்பங்களை ஏதிலியாக்கி விட்டு இன்று அரசியல் கட்சி என்றும் புதிய உறுப்பினர்கள் என்றும் இருப்பதற்க்கு அத்திவாரமிட்ட தோழர்களை தவிக்க விடலாமா ??
அவர்களுக்கு துரோகம் பண்ணலாமா?
அவர்கள் ஏன் தமது உயிரை அர்ப்பணித்தனர்?
முன்னாள் தோழர்கள் எனப்படுவோரை நீங்கள் என்ன பாவித்து விட்டு எறிவதா தோழமை என்பது, தோழர்கள் என்பது, இவர்களுடன் போய் அமைதியாக பேசமுடியாத நீங்கள் விடுதலை இயக்கமா?
நிச்சயமாக நீங்கள் உங்கள் தனிப்பட்ட சுயலாபங்களுக்கே இயங்குகின்றீர்கள் இதை மறுதலிப்பதாயின் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், உங்கள் பக்கத்தே அவர்களும் வாழ்கின்றார்கள்.
"சிந்தியுங்கள்"
இவ் விடயங்களை உள்ளடக்கிய ரெலோவாக ரெலோ அமைப்பியலை, இயங்கியலை திருத்தியமைத்து இயங்க முடியாதா ? என்ன?
புதிய உறுப்பினர்கள் உங்களை நம்ப வேண்டுமா?
மக்களுக்காகன இயக்கமா?
மக்களுக்காகன அரசியலா?
எப்படி என்று முன்னாள் போராளிகளுக்கு உங்களை புரியவையுங்கள்.
இந்த தோழர்களுடன் பழகி வாழ்த தோழர்களில் பலர் தாம் இயக்கம், கட்சி எனப் பெருமை பேசிக் கொண்டிருப்பவர்கள் இந்த தோழர்களை சிந்திக்க வேண்டும் அந்த தோழர்களுக்கு உதவவும் இயங்க வேண்டும்.
===================
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
18/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்: uktelo@gmail.com, telolondon@gmail.com

Friday 18 January 2019

கடிதம் 19, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

கடிதம் 19, (1)தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 18/01/2019, (கடிதம் 19, மாதம் 01, கிழமை 03)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
தமிழீழ விடுதலை இயக்கமும் இலங்கையில் முன்னாள் போராளிகளும்.
===============
நான் இந்த தலைப்பை இடுவதற்கான காரணம் இலங்கையில் தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டி வளர்த்த தோழர்களின் கருத்துக்களிலிருந்தும், அவர்களின் இன்றய வறுமை நிலைமைகளிலிருந்துமேயாகும்.
எந்தவித உதவிகளும் இன்றி கடின உழைப்பிலும் போதாமையுடன் வாழ்வு வாழ்கின்றார்கள், தாம் இந்த கடின வாழ்வை புலிகளின் கொலைகளைத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருப்பதாயும், தமது சுய முயற்சியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை கெளரவத்துடன் கூறுகிறார்கள்.
"நாம் மிகவும் அதிகமாக இயக்கம் பற்றி சிந்தனையுடன் வாழ்ந்து விட்டோம் ", போராட்டம் தோற்றது ஒருபக்கம் மக்களின் இழப்புக்கு பின்னரும் ரெலோ தமது மக்கள் பற்றிய சிந்தனையற்றே இருக்கின்றது என்பதே அவர்களது கருத்தாகும், இயக்கம் என்பது, அரசியல் கட்சி என்பது இதுவா சீ , சீ ஒரு விடுதலைப் போராட்டவாதிகள் என்பதற்க்கு அவமானம்.
முன்னாள் போராளிகளில் பலர் இன்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றார்கள், பலரை ரெலோ முன்னணி உறுப்பினர்கள் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு போகிறார்கள்.
இவர்களை நம்பி இவர்களுடன் இயக்கத்தில் இருந்தோம் எம்மை இழந்தோம், என முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
இது ஏன் ?
இந்த முன்னாள் ரெலோ உறுப்பினர்களுடன் அமைதியாக, ஆறுதலாக பேச முடியாது என்றால் நீங்கள் எப்படி அப்பாவிகள், ஏதிலிகளாக உள்ளவர்கள், நலிந்த பொது மக்களுடன் பேசுவீர்கள்.
நீங்கள் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம், கட்சி நடத்துகின்றோம் என்று கூறுவதை நம்பமுடியுமா?
முகநுாலிலும் , தனிப்படவும் பல தோழர்கள் ரெலோ பற்றிய வெறுப்புடன் கொதிப்புடன் இருக்கிறார்கள், இவர்கள் யாபேரும் உங்களுக்கு பக்கத்திலேயே உங்கள் இலங்கை பிரசைகளாகவே, உங்களுக்கு வாக்களிப் பவர்களாகவே வாழ்கின்றார்கள்.
நீங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் கடந்த காலத்தில் ரெலோவில் இயங்கியவர்களின் பெயர் விபரம் இன்னும் தயாரிக்க வில்லை என்றால் எப்படி மக்களுக்காக இயங்குகின்றீர்கள் என நம்புவது ?
கடந்த பல பல வருடங்களில் உங்களால் செய்யப்பட்ட மக்களுக்கான தினக் குறிப்புக்களை வெளிப்படுது வீர்களா ?
கட்சி, இயக்கம் மக்களினது மக்களுக்கு உங்கள் கடமைகளை வெளிப்படையாக முன்வைப்பீர்களா ?
இயக்கம், கட்சி என்பது தொழில் அல்ல மக்களை ஒருங்கிணைத்து மக்களுடன் இணைந்து மக்களுக்காக இயங்குவதே ஆனால் இன்று ரெலோ ஒரு அரசியல் சந்தர்ப்பவாதிகளாக தேர்தலுக்காக மட்டும் சென்று வாக்கு கேட்டு விட்டு மக்களை மறக்கும் மிதவாதிகளாகவே இயங்குகின்றீர்கள்.
இச் செயலுக்காக இயக்கம் கட்டப்படவில்லையே! , இச்செயலுக்காக இயக்கத்துக்கு உறுப்பினர்கள் தம் உயிரை அர்ப்பணிக்க வில்லையே !
தமிழீழ விடுதலை இயக்கத்தை புலிகளிடமிருந்து பாதுகாத்த பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள், இயக்கத்துக்காக எமக்கு உதவிசெய்த பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு இவர்களது மரணத்துக்கு முன்பாவது ரெலோ தனது நன்றியை தெரிவிக்குமா ???
உதாரணத்துக்கு புலிகளால் வட்டுக்கோட்டையில் கொல்லப்பட்ட பல தோழர்களில் ஒருவர் சங்கர்லால் அவரது கொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பம் 1986 லிருந்து இன்றும் கடின வாழ்வில் இருக்கிறார்கள் சங்கர்லால் பெயரால் தம் கெளரவத்துக்கு இழுக்கு வராமலும் வாழ்கிறார்கள்,
இது அவர்களது நிலைப்பாடு நீங்கள் ரெலோ மக்களுக்காக இயங்குகிறோம் என்பவர்கள் இந்த தோழர்களின் குடும்பத்தை ஒரு கணம் சிந்திக்க வேண்டாமா ? சங்ஙர்லால் போன்ற போன்ற பல தோழர்கள் பயிற்சி முகாம்களில் "நாம் போராட்டத்தில் இறந்தால் எமது இயக்கம் எமது குடும்பத்தை பாதுகாக்கும் என்று கூறியது உங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா ???
இவன் போன்ற தோழர்களின் குடும்பங்களை, முன்னாள் போராளிகளை நீங்களாக போய் ஏன் பறையக் கூடாது? அவர்களது நலம் விசாரிக்க கூடாது? தேவைகளுக்கு உதவக் கூடாது?
தோழர் சங்கர்லால் இறுதியாக சந்தித்த போது தனக்கு மிகவும் பிடித்தமான சேட்டை எனக்கு தந்து வெளியிடங்களுக்கு போக அனுப்பிய ஞாபகத்தையும் இணைத்து பதிவிட விரும்புகிறேன்.
இயக்கத்தில், பயிற்சி முகாம்களில் இந்தியாவில் , சென்னையில், சேலத்தில், காஞ்சிபுரத்தில் ஒன்றாக வாழ்ந்த தோழர்களை இப்படி கைவிடலாமா???
திட்டமிடலில், வாழ்விலும், வெற்றியிலும், போராட்ட துன்பத்தில் பங்கு கொண்ட தோழர்களை மறப்பது மனிதாபமா???
மக்களுக்காக இயங்கும் நீங்கள் உங்களுடன் இணைந்திருந்தவர்களை கைவிட்டு, குடும்பங்களை ஏதிலியாக்கி விட்டு இன்று அரசியல் கட்சி என்றும் புதிய உறுப்பினர்கள் என்றும் இருப்பதற்க்கு அத்திவாரமிட்ட தோழர்களை தவிக்க விடலாமா ??
அவர்களுக்கு துரோகம் பண்ணலாமா?
அவர்கள் ஏன் தமது உயிரை அர்ப்பணித்தனர்?
முன்னாள் தோழர்கள் எனப்படுவோரை நீங்கள் என்ன பாவித்து விட்டு எறிவதா தோழமை என்பது, தோழர்கள் என்பது, இவர்களுடன் போய் அமைதியாக பேசமுடியாத நீங்கள் விடுதலை இயக்கமா?
நிச்சயமாக நீங்கள் உங்கள் தனிப்பட்ட சுயலாபங்களுக்கே இயங்குகின்றீர்கள் இதை மறுதலிப்பதாயின் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், உங்கள் பக்கத்தே அவர்களும் வாழ்கின்றார்கள்.
"சிந்தியுங்கள்"
இவ் விடயங்களை உள்ளடக்கிய ரெலோவாக ரெலோ அமைப்பியலை, இயங்கியலை திருத்தியமைத்து இயங்க முடியாதா ? என்ன?
புதிய உறுப்பினர்கள் உங்களை நம்ப வேண்டுமா?
மக்களுக்காகன இயக்கமா?
மக்களுக்காகன அரசியலா?
எப்படி என்று முன்னாள் போராளிகளுக்கு உங்களை புரியவையுங்கள்.
இந்த தோழர்களுடன் பழகி வாழ்த தோழர்களில் பலர் தாம் இயக்கம், கட்சி எனப் பெருமை பேசிக் கொண்டிருப்பவர்கள் இந்த தோழர்களை சிந்திக்க வேண்டும் அந்த தோழர்களுக்கு உதவவும் இயங்க வேண்டும்.
===================
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
18/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்: uktelo@gmail.com, telolondon@gmail.com